மேலும் அறிய

ABP நாடு Exclusive: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழ்நாடு - கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் உயிரிழந்தார். நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழ்நாடு - கேரளா  எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் கேரளா மாநில எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவலம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலாக உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நிபா வைரஸ், ஜிகா வைரஸ் மற்றும் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்படுவதால் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோரிடம் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. அச்சான்றிதழ்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். கோவை மாவட்டத்திற்கு வருவோரின் வாகன எண்கள் பதிவு செய்யப்படுகிறது. வாளையாறில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், வாகன சோதனைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


ABP நாடு Exclusive:  தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை-  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும் போது, ”கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் உயிரிழந்தான். இதன் காரணமாக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்கு 13 வழிகள் உள்ளது. அந்த வழிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை சோதனையும் நடத்தி வருகிறோம். நிபா வைரசை பொருத்தவரை கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை காய்ச்சல் நோயாளிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

சுல்தான்பேட்டை பகுதியில் 3 அரசுப் பள்ளி மாணவர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவிய சம்பவம் குறித்த கேள்விக்கு, ”பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கன்பட்டு, தனிமனித  இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி,  சிறந்த முறையில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். யாரும் அச்சப்பட வேண்டாம். கோவையைப் பொருத்தவரை 83 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலைக்கு செல்லாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார். 

இதனிடையே தமிழ்நாட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக ஏபிபி நாடுசெய்தி நிறுவனத்திடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் இதுவரை நிபா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget