மேலும் அறிய

Gokulraj murder case: பிறழ்சாட்சியான சுவாதி...! விஷ்ணுப்பிரியா தற்கொலை...! மாற்றப்பட்ட கருணாநிதி - கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு கடந்து வந்த பாதை...!

’’செல்போன் உரையாடல், சிசிடிவி பதிவுகளை ஒரு வழக்கில் ஆதாரங்களாக சேர்க்கும்போது ஆவண சாட்சியமாக குறியீடு செய்ய வேண்டும். ஆனால் போலீசோ சிசிடிவி கேமராவை மெட்டீரியல் ஆப்ஜெக்ட் என்று குறிப்பிட்டுள்ளனர்’’

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணி மற்றும் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்
 
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாக கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
 
டி.எஸ்.பி.விஷ்ணுப்ப்ரியா தற்கொலை
 
Gokulraj murder case: பிறழ்சாட்சியான சுவாதி...! விஷ்ணுப்பிரியா தற்கொலை...! மாற்றப்பட்ட கருணாநிதி - கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு கடந்து வந்த பாதை...!
டி.எஸ்.பி.விஷ்ணுப்ப்ரியா
 
சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30 ஆம் தேதி விசாரணையும் ஆரம்பமாகியது. அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வக்கீலாக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதி.
 
பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி
 
சுவாதியும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி, திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின.
 
மாற்றப்பட்ட அரசு வழக்கறிஞர் 
 
அரசு வழக்கறிஞரான கருணாநிதியின் போக்குதான் இதற்குக் காரணம் என மனம் வெதும்பிய கோகுல்ராஜின் தாய் சித்ரா, அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார்.
 
Gokulraj murder case: பிறழ்சாட்சியான சுவாதி...! விஷ்ணுப்பிரியா தற்கொலை...! மாற்றப்பட்ட கருணாநிதி - கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு கடந்து வந்த பாதை...!
வழக்கறிஞர் ப.பா.மோகன்
 
அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தர விட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
 
வழக்கின் போக்கை மாற்றிய சிசிடிவி காட்சி
 
2019 ஆம் ஆண்டு மே 05-ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திடீர் திருப்பமாக அரசு தரப்புக்கு வலுவான சாட்சிகள் கிடைத்துள்ளன. வழக்கின் தற்போதைய நிலை குறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்ட போது, "தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி செல்போன் உரையாடல், சிசிடிவி பதிவுகள் இவற்றை ஒரு வழக்கில் ஆதாரங்களாக சேர்க்கும்போது ஆவண சாட்சியமாக குறியீடு செய்ய வேண்டும். ஆனால் போலீசோ, திருச்செங்கோடு மலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை மெட்டீரியல் ஆப்ஜெக்ட் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அரசு தரப்பு கவனிக்காமல் விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதை சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது என முதலில் சொன்ன மதன்குமார், கடந்த நவம்பர் 27-ஆம் தேதி நடந்த விசாரணையில் உண்மையைச் சொல்லிவிட்டார். அதுவும் கோவில் உதவி ஆணையர் சூரிய நாராயணனின் சாட்சியத்திற்குப் பிறகு. இதனை இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக மாறியது.
 
யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு 
 
 
Gokulraj murder case: பிறழ்சாட்சியான சுவாதி...! விஷ்ணுப்பிரியா தற்கொலை...! மாற்றப்பட்ட கருணாநிதி - கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு கடந்து வந்த பாதை...!
யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர்
 
கைது செய்யப்பட்ட 17 பேரில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேரை விடுதலை செய்து மாவட்ட நீதிபதி சம்பத் குமார் உத்தரவு 2015 நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தலை துண்டிக்கப்பட்டு கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டு 116 சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யுவராஜ் உட்பட 10 பேருக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilnadu Power Cut: மக்களே அலர்ட்.. தமிழ்நாட்டில் நாளை (27-06-26)பவர் கட் ஏற்படும் இடங்கள்.. லிஸ்ட் இதோ
Tamilnadu Power Cut: மக்களே அலர்ட்.. தமிழ்நாட்டில் நாளை (27-06-26)பவர் கட் ஏற்படும் இடங்கள்.. லிஸ்ட் இதோ
வாக்குறுதி 5 ஏக்கர்.. தள்ளுபடியோ வெறும் 50 ஆயிரம்! - தவெக அரசின் 'ஸ்கேம்'-ஐ தோலுரித்த டிடிவி தினகரன்
வாக்குறுதி 5 ஏக்கர்.. தள்ளுபடியோ வெறும் 50 ஆயிரம்! - தவெக அரசின் 'ஸ்கேம்'-ஐ தோலுரித்த டிடிவி தினகரன்
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
Guru Peyarchi 2026 Rishabam: 2026 குரு பெயர்ச்சி.. ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. என்ன நடக்கும்?
2026 குரு பெயர்ச்சி.. ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. என்ன நடக்கும்?
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM.. அநீதி, மோசடி செய்வதா CM சார்? சீறிய உதயநிதி
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM.. அநீதி, மோசடி செய்வதா CM சார்? சீறிய உதயநிதி
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
Vivo T5X 5G Vs OnePlus Nord CE6 Lite: விவோ T5X 5G-ஆ.? ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்டா.? ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் சிறந்தது எது.? முழு ஒப்பீடு
விவோ T5X 5G-ஆ.? ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்டா.? ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் சிறந்தது எது.? முழு ஒப்பீடு
Esakki Subaya resigned : அதிமுக MLA இசக்கி சுப்பையா ராஜினாமாவை ஏற்க சபாநாயாகர் மறுப்பு.! திடீர் ட்விஸ்ட்- இது தான் காரணமா.?.
அதிமுக MLA இசக்கி சுப்பையா ராஜினாமாவை ஏற்க சபாநாயாகர் மறுப்பு.! திடீர் ட்விஸ்ட்- இது தான் காரணமா.?.
Cong TVK: தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
Embed widget