மேலும் அறிய

Fire Accident : சென்னையில் மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து..! நடந்தது என்ன...?

சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அசோக்நகர் 2 ஆவது அவென்யூவில் உள்ள தனியார் மருந்து நிறுவனக் கடையில் இன்று காலை புகை வெளியானதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்ததும் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதல்கட்டமாக அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  

இதையடுத்து, அவர்கள் தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடிப்பதால் தீ விபத்து நேரிட வாய்ப்புள்ளதை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தயார் நிலையில் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஷட்டர் மூடியிருப்பதால் நிறுவனம் உள்ளே தீயை அணைக்க சற்று காலதாமதம் ஏற்பட்டது. மருந்து கிடங்கு என்பதால் புகை அதிகம் வெளியானது. அப்பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவன கிடங்கில் இருந்த சில வாகனங்களும் தீக்கிரையாகியது. தீவிபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்து சில வாரங்களுக்கு முன் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத் கேஸ் ஏஜென்சி நடைபெற்று வந்தது. இந்த கேஸ் குடோனில் கமர்ஷியல் சிலிண்டருக்கும் தொழிற்சாலை சிலிண்டர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் அனுமதியின்றி கேஸ் நிரப்பும் பணியையும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு 7 மணியளவில் கேஸ் சிலிண்டரை இறக்கும்போது தவறுதலாக கீழே விழுந்ததில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 80/90 சதவீதத்துக்கு மேல் படுகாயம் அடைந்த ஜீவானந்தம், சந்தியா, பூஜா, அருண், குணால் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் 30/50 சதவீத தீக்காயங்களுடன் நிவேதா, சக்திவேல், சண்முகப்பிரியன், கோகுல், தமிழரசன், கிஷோர், வட மாநிலத்தை சேர்ந்த அமோத்குமார் ஆகிய 7 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சக்திவேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நிவேதா ஜீவானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று பூஜா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார்
மற்றும் கேஸ் குடோன் மேலாளர் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Udumalpet Power Cut (04-06-2026): உடுமலைப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ முழு லிஸ்ட்
Udumalpet Power Cut (04-06-2026): உடுமலைப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ முழு லிஸ்ட்
Tamilnadu Power Cut: தமிழ்நாட்டில் நாளை(04-06-2026) இத்தனை ஊர்களில் மின்வெட்டா? முழு லிஸ்ட்
Tamilnadu Power Cut: தமிழ்நாட்டில் நாளை(04-06-2026) இத்தனை ஊர்களில் மின்வெட்டா? முழு லிஸ்ட்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget