மேலும் அறிய

Fengal Cyclone: அடாத மழையிலும் அடங்காத ‘’குடி’’மகன்கள்: சென்னை புளியந்தோப்பில் அட்டகாசம்!

குடிமகன்கள் தங்களின் உயிரோடு, பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொட்டும் கனமழைக்கு நடுவில், வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதை விடுத்து, குடிமகன்கள் டாஸ்மாக்கில் குவிந்துள்ளனர்.

தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தொடர்ந்து பெய்துவரும் கன மழை

ஃபெஞ்சல் புயல் சென்னை, மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்துள்ளது.

சென்னையில் 134 இடங்களில் மழைநீர்  தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 1,600 மோட்டார் பம்புகள் கொண்டு முக்கிய இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. முக்கிய சாலைகள், அதாவது ஓஎம்ஆர், மயிலாப்பூர் சாலை, ஐந்து ஃபர்லாந்து சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்ணா மேம்பாலம், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களிலும் தண்ணீர் குளம்போலத் தேங்கியுள்ளது.

முழு வீச்சில் இயங்கும் ஊழியர்கள்

சென்னையில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை 5 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின்சார வாரியமும் முழு வீச்சில் இயங்கி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா உணவகத்தில் இன்று முழுவதும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் முழங்கால் வரை தேங்கி உள்ளது. இதனால் மழைக்கு பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்பதை விடுத்து, குடிமகன்கள் டாஸ்மாக்கில் குவிந்துள்ளனர். அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் கொட்டும் மழையிலும் உயிரைக் கொடுத்துப் பணியாற்றி வரும் சூழலில், குடிமகன்கள் தங்களின் உயிரோடு, பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு இத்தகைய பேரிடர்க் காலங்களில் டாஸ்மாக்கைத் திறக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget