மேலும் அறிய

கன்னியாகுமரி : ரப்பர் தொழிலில் ஏற்பட்ட அமோக வளர்ச்சி , விவசாயிகள் மகிழ்ச்சி..!

தரமான ரப்பர் ஷீட் கிலோவுக்கு ரூ. 165 வரை விற்கப்படுகிறது. இதனால், ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் - இயற்கை தனது அழகு மொத்தமும் போர்வை கொண்டு போர்த்தியது போல இயற்கையோடு ஒட்டி உள்ள மாவட்டம்தான் கன்னியாகுமரி மாவட்டம் .

இங்குள்ள மக்களின் பெரும்பாலான வீடுகளில் ரப்பர் மரம் எளிதாக வளர்கிறது . காரணம் இங்குள்ள மண் வளம் தான் முக்கிய காரணம் மேலும் குளிர்ச்சியான சூழலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது . இங்குள்ள செம்மண் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், மரங்கள் செழிப்பாக வளர உதவுகிறது.


கன்னியாகுமரி : ரப்பர் தொழிலில் ஏற்பட்ட அமோக வளர்ச்சி , விவசாயிகள் மகிழ்ச்சி..!

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலைக்கடை , அருமனை , திருவட்டார் , குலசேகரம் , திற்பரப்பு , ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா சூழல் முடிந்து தற்போது அணைத்து வியாபாரமும் சராசரி நிலையை எட்டியுள்ள நிலையில் ரப்பர் தொழிலும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது 

குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு மற்றும் தோவாளை தாலுகாவின் சில பகுதிகளில் ரப்பர் பெருமளவில்  பயிரிடப்படுகிறது. இங்கு சுமார் 6,000 ஹெக்டர் பரப்பில் அரசு ரப்பர் தோட்டங்களும், 22,000 ஹெக்டர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும் உள்ளன. குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் ஷீட்டுகளுக்கு உலக மார்க்கெட்டில் அதிக வரவேற்பு உள்ளது. 


கன்னியாகுமரி : ரப்பர் தொழிலில் ஏற்பட்ட அமோக வளர்ச்சி , விவசாயிகள் மகிழ்ச்சி..!

இங்கு ரப்பர் பால் வடிப்பு செய்தல், ரப்பர் நர்சரி, புகையறையில் ரப்பர் ஷீட் உலர்த்துதல், ரப்பர் ஷீட் வியாபாரம் என ஏராளமானோர் ரப்பரை நம்பியே உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரப்பர் ஷீட்டின் விலை கணிசமாக குறைந்து வந்தது. கடந்த ஆண்டு கிலோ ரூ.120 க்கும் கீழே சென்றது. இதனால், சிறு, குறு ரப்பர் விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தவித்தனர்.


கன்னியாகுமரி : ரப்பர் தொழிலில் ஏற்பட்ட அமோக வளர்ச்சி , விவசாயிகள் மகிழ்ச்சி..!

 

தற்போது ரப்பர் ஷீட்டின் விலை சற்று உயர்ந்து வருகிறது. தரமான ரப்பர் ஷீட் கிலோவுக்கு ரூ. 165 வரை விற்கப்படுகிறது. இதனால், ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இது குறித்து ரப்பர் தொழிலாளி சண்முகம் கூறியதாவது, தற்போது விவசாய இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலைக்கூலி ஆகியன உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரப்பரின் விலை இறங்கு முகத்தில் சென்று கொண்டிருந்தது. தற்போது விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால்தான் ரப்பர் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்க முடியும் என்றார்.  
 
கன்னியாகுமரி மாவட்ட  ரப்பர் போர்டு உதவி வளர்ச்சி அலுவலர் முரளி கூறியதாவது:- இந்தியாவில் ஆண்டுக்கு 8½ லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ரப்பரின் தேவை 12 லட்சம் டன் ஆகும். எனவே, வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக ரப்பர் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரம் டயர் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்களின் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதனால், ரப்பரின் தேவை அதிகரித்து மார்க்கெட்டில் விலை அதிகரித்துள்ளது, என்றார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
சென்னை : 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண் - ஊரை விட்டு ஓட முயன்றபோது சிக்கியது எப்படி?
சென்னை : 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண் - ஊரை விட்டு ஓட முயன்றபோது சிக்கியது எப்படி?
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
Siragadikka Aasai Serial July 16 : பயத்தில் உதறும் விஜயா மனோஜ்... பார்வதி கொடுத்த ஐடியா என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Serial July 16 : பயத்தில் உதறும் விஜயா மனோஜ்... பார்வதி கொடுத்த ஐடியா என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று
Embed widget