மேலும் அறிய

கொடநாடு பிரச்சனையை கையில் எடுத்த ஓபிஎஸ் - பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

”கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு தான். கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் ஓராண்டாக விசாரணை நடைபெறவில்லை”

அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வழங்கும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ஐஜி விசாரித்து வந்த வழக்கை, ஏன் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு மாற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், , “ கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசின் கடமையாகும். அதனை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். தீவிர விசாரணையில் இந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் யார் என்பது தெரிய வரும். கோடநாடு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது என்றார். கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு என்ற ஜெயக்குமார், கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் ஓராண்டாக விசாரணை நடைபெறவில்லை. அதன்பிறகு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க கூடிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது" என்றார். 

முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்படி, மேற்கு மண்டல காவல்துறை ஐஜி தலைமையில் கொடநாடு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது என்றும், 90 சதவீதம் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், வழக்கு திடீரென சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். தற்போது கொடநாடு வழக்கை உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருவதாக குறிப்பிட்ட ஜெயக்குமார், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி விசாரித்து வந்த வழக்கை, அவருடைய குறைந்த அந்தஸ்து கொண்ட போலீசாருக்கு மாற்ற காரனம் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன..? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடுவதாக சாடினார். 

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதாக கூறியதுடன்,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டும் மிரட்டும் திமுகவின் மாய வித்தைக்கு அதிமுக அஞ்சாது என்றார். இறுதியாக அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எல்லாத்துக்கும் பதிலடியாக மறுவிசாரணை நடத்தப்படும் என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget