மேலும் அறிய

AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு

முதலமைச்சர் அடக்குமுறையை கையாளுகிறார். அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெறாது என அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 

இந்நிகழ்வில் பேசிய அவர், “துயரமான இந்த நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டமே கள்ளச்சாராய மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது அளிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கள்ளச்சாராய மரணத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் கூட்டம் போட்டு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

செய்திகளில் மட்டும் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை அடியோடு ஒழிக்கப்படும் என இடம் பெறுகிறது. ஆனால் அதற்கான நடவடிக்கை என்பது இல்லை. மாவட்ட காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது என்றால் எந்த மாதிரியான ஆட்சி நடைபெறுகிறது என்பதை காணலாம். 

ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெறாது. இன்று ஆட்சியாளர்களின் அடாவடித்தனமான செயல், முதலமைச்சரின் நிர்வாக திறமையற்ற செயல் ஆகியவை காரணமாக 60 பேர் மரணமடைந்துள்ளதாக செய்திகளில்  தெரிவித்துள்ளார்கள். அரசு தகவல்படி 58 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளர்கள். அத்தனை பேர் இறப்புக்கும் இந்த அரசு தான் பொறுப்பு. தமிழ்நாடு அரசின் அலட்சியம் தான் காரணம். 

இதனையெல்லாம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலமைச்சர் அடக்குமுறையை கையாளுகிறார். அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருக்கிறார்கள். நான் நின்று கொண்டிருக்கும் மேடையும் அகற்றப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டது தான். ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை எல்லாம் தடுக்கிறார்கள். காற்றை எப்படி தடுக்க முடியாதோ அதுபோல் மக்கள் உணர்வையும் தடுக்க முடியாது. இதற்கு எல்லாம் வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க வேண்டும் என்று தான் அதிமுக போராடி கொண்டிருக்கிறது. 

ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள். உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர சிபிஐ விசாரணை வேண்டும். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறா வண்ணம் இருக்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும். அதற்காக எத்தனை தியாகம் வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயார்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
Embed widget