மேலும் அறிய

மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிலைப்பு கிடையாதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

மாற்றுத் திறனாளி பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதற்கான  அரசாணை 151 கலைஞர் ஆட்சிக் காலத்தில் கடந்த 2008ஆம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கவில்லை எனவும் வாய்கிழிய வசனம் பேசி நடைமுறையில் துரோகம் செய்யும் திமுக என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கான  வாய்ப்புகளையும், அவர்களுக்காக சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்துவதற்கான வசதியையும் ஒற்றை அரசாணையின் மூலம் திமுக அரசு பறித்திருக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலராக தங்களை சித்தரித்துக் கொள்ளும் திமுக, அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு நன்மை செய்யாமல் தீங்கிழைப்பது கண்டிக்கத்தக்கது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் 24 என்ற எண் கொண்ட அரசாணையின் மூலம் அரசு பணிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைபெறவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில், ஏற்கனவே அரசுத் துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எழுத்துத் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களின் போது, அதில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளின் அரசுத் துறை தற்காலிக  பணி அனுபவம் 2 முதல் 10 ஆண்டுகள் வரை இருந்தால் 5 மதிப்பெண்களும், 11&15 ஆண்டுகளாக இருந்தால் 8 மதிப்பெண்களும், 16 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருந்தால் 10 மதிப்பெண்களும் தகுதி காண் மதிப்பெண்களாக வழங்கப்படும். போட்டித் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுடன் கூடுதலாக இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்  என்பது தான் இந்த அர்சாணையின் நோக்கம் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்க்கும் போது இந்த அரசாணை மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு நன்மை செய்வதைப் போலத் தோன்றினாலும் உண்மையில் இது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உரிமைகளை பறிக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் அரசாணை எண் 151இன்படி தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது  2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும். அதேபோல், கடந்த 2023&ஆம் ஆண்டு இதே துறை சார்பில் வெளியிடப்பட்ட 20&ஆம் எண் கொண்ட அரசாணையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்த முடியும். ஆனால், இப்போது திமுக அரசு பிறப்பித்திருக்கும் புதிய அரசாணையின் மூலம் கடந்த 2008, 2023&ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

இதன்மூலம் தற்காலிகமாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் பொதுவான ஆள்தேர்வு நடைமுறைகளில் மற்ற பிரிவினருடன் போட்டிட்டு தான் அரசு பணிகளில் சேர முடியும். அரசுத் துறைகளில் 1077 மாற்றுத் திறனாளிகள் குறைந்தபட்சம்  2 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகளைக் கடந்தும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீண்டும் போட்டித் தேர்வு எழுதி இன்றைய இளம் தலைமுறையினருடன் போட்டியிட்டு அரசு பணிகளில் சேருவதற்கு வாய்ப்பே இல்லை. புதிதாக வெளியிட்ட அரசாணையின் மூலம் மாற்றுத் திறன் தற்காலிக ஊழியர்கள் பணி நிலைப்பு பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் திமுக அரசு அடைத்திருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளின் ஒற்றை பாதுகாவலர்கள் தாங்கள் தான் என பல ஆண்டுகளாக திமுக  பெருமை பேசி வருகிறது. உடல் ஊனமுற்றவர்களை அவ்வாறு அழைக்கக்கூடாது என்பதற்காக அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்க அரசாணை பிறப்பித்ததே திமுக அரசு தான் என்று கலைஞர் காலத்திலிருந்து திமுக மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக திமுக செய்தது என்னவென்றால் அடுக்கடுக்கான துரோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

மாற்றுத் திறனாளி பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதற்கான  அரசாணை 151 கலைஞர் ஆட்சிக் காலத்தில் கடந்த 2008ஆம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டு விட்டது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு சுமார் 3 ஆண்டுகள் திமுக தான் ஆட்சியில் இருந்தது. உண்மையாகவே மாற்றுத்திறனாளிகள் நலனில் திமுகவுக்கு அக்கறை இருந்திருந்தால், அப்போதே அரசாணை எண் 151&ஐ நடைமுறைப்படுத்தி இருக்கலாம். அவ்வாறு நடைமுறைப்படுத்தியிருந்தால் மாற்றுத்திறன் கொண்ட தற்காலிக  பணியாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே பணி நிலைப்பு கிடைத்திருக்கும். அதன்பின் 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்து 56 மாதங்கள் நிறைவடையப் போகின்றன.  இந்தக் காலத்தில் அரசாணை எண் 151&ஐ செயல்படுத்தும்படி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் பல முறை கோரிக்கை விடுத்தும்  அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதுமட்டுமின்றி, இனி எந்தக் காலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிலைப்பு கிடைக்காத அளவுக்கு தடைச்சுவரை திமுக எழுப்பியுள்ளது. இதை விட மிக மோசமான சமூக அநீதியை மாற்றுத்திறனாளிகளிக்கு இழைக்க முடியாது.

துரோகங்களை இழைப்பதில் மட்டும் தான் திமுக சமநிலையை கடைபிடித்து வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எத்தகைய துரோகங்களை செய்ததோ, அதே துரோகங்களைத் தான் மாற்றுத் திறனாளிகளுக்கும் திமுக செய்திருக்கிறது. இந்த துரோகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் சட்டமன்றத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள். அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் மாற்றுத் திறன் கொண்ட தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget