மேலும் அறிய

தன்பாலீர்ப்பு உறவை கைவிட சொன்ன போலீஸ்.. காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்று பெண் விபரீதம்..

தன்பாலீர்ப்பு உறவை கைவிட மறுத்த இளம்பெண்களுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் அறிவுரை கூறியதாக தெரிகிறது

தன்பாலீர்ப்பு உறவை கைவிட மறுத்த இளம்பெண்களுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் அறிவுரை கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் இவருடன் அதே கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இருவரும் தினமும் கல்லூரிக்கு ஒன்றாக பேருந்து செல்வதால் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் . கடந்த 2 ஆண்டாக இந்த பழக்கம் நீடித்தது. இதனிடையே கோவையில் வேலை கிடைத்து 22 வயது பெண் அங்கு சென்றுவிட்டார். அப்போது செல்போனில் பேசி, விடுமுறையில் ஊருக்கு வரும் போது ஒன்றாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதமாக 21 வயது பெண் மீது பெற்றோருக்கு, சந்தேகம் எழுந்துள்ளது. இதை அறிந்து அவர் கடந்த 30ம் தேதி, பெற்றோரிடம் தோழியை விரும்புவதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் இரு இளம்பெண்களையும், அவர்களது பெற்றோரையும் வரவழைத்து ஒரு வாரமாக விசாரித்தனர். நேற்றும் இருதரப்பினரையும் அழைத்து பேசினர்.

தோழிகளிடம் இதுபோன்ற நடவடிக்கை வாழ்க்கைக்கு ஒத்து வராது. பெற்றோர் சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள் என போலீசார் அறிவுரை கூறினர். அதை ஏற்க மறுத்த இருவரும், “பெண்கள் சேர்ந்து வாழ சட்டத்தில் இடமுள்ளது. எனவே நாங்கள் சேர்ந்து வாழ்வோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது” என திட்ட வட்டமாக தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதே, திடீரென 22 இளம்பெண் தனது பேக்கில் வைத்திருந்த பிளேடை எடுத்து கையிலும், கழுத்திலும் அறுத்துக்கொண்டார். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரவீனா, மருத்துவமனைக்கு வந்து அந்த இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்.

பின்னர் இளம்பெண், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தன்பாலீர்ப்பு உறவு விவகாரத்தில் பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே கை, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது பென்னாகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget