மேலும் அறிய

விழுப்புரம் புறவழிச்சாலையில் ஆம்னி பஸ்களுக்கு நிரந்தர நிறுத்தம் அமைக்க கோரிக்கை!

விழுப்புரம் புறவழிச்சாலையில் அவதியுறும் பயணிகள்: ஆம்னி பஸ்களுக்கு பாதுகாப்பான நிறுத்தம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை!

விழுப்புரம்: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் நாள்தோறும் விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வரும் நிலையில் ஆம்னி பஸ்களுக்கு பாதுகாப்பான நிறுத்தம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எழுந்துள்ளது.

ஆம்னி பஸ்களுக்கு பாதுகாப்பான நிறுத்தம் வேண்டும்!

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் நாள்தோறும் விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் விழுப்புரம் புறவழிச் சாலை (புறநகர் பகுதியில்) அருகே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனர். குறிப்பாக திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், விழுப்புரம் முத்தாம்பாளையம் மேம்பாலம் கட்டப்படும் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இப்பகுதியில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததால், இரவு நேரங்களில் விழுப்புரம் நகர பகுதிக்குச் செல்லும் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

தீபாவளி தற்காலிக ஏற்பாடும் அலட்சியமும்:

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, முத்தாம்பாளையம் மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, முத்தாம்பாளையம் சர்வீஸ் சாலையில் ஆம்னி பஸ்கள் நிறுத்துவதைத் தவிர்த்து, விழுப்புரம் புறவழிச் சாலையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு பின்புறம் உள்ள எல்லீஸ்சத்திரம் மேம்பாலத்திற்கு கீழே உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் மற்றும் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம், நகரத்தின் மையப்பகுதியை ஒட்டி, ஆம்னி பஸ்களை நிறுத்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பகுதியில், ஆம்னி பஸ்களை சர்வீஸ் சாலையில் நிறுத்துவதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. மேலும் திருச்சி மார்க்கம் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள், கார்கள் மேம்பாலத்தில் செல்வதால், பாதுகாப்பான முறையில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு விபத்து அச்சமின்றி பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, எல்லீஸ்சத்திரம் பகுதியில் திருச்சி மார்க்கமாக மேம்பாலத்தின் இடதுபுறத்தில், ‘ஆம்னி பஸ்கள் நிறுத்தம்’ என பெயர் பலகை அமைக்கப்பட்டது. ஆனால், தீபாவளி பண்டிகை முடிந்து கூட்ட நெரிசல் குறைந்ததும், இந்த ஆம்னி பஸ் நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்:

இப்பகுதியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

பாதுகாப்பான நிறுத்தம் & பிக்-அப் வசதி: விழுப்புரம் புறநகர்ப் பகுதியில் ஆம்னி பஸ்களுக்கு பாதுகாப்பான முறையில் நிறுத்தம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கிருந்து பயணிகளை அழைத்துச் செல்வதற்கு ‘பிக்-அப்’ சர்வீஸ் வசதி செய்திட வேண்டும்.

நிழற்குடை மற்றும் விளக்கு வசதி: விழுப்புரம்-எல்லீஸ்சத்திரம் சாலையின் மீது உள்ள மேம்பாலத்தின் அருகில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதால், இப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையின் இருபுறத்திலும் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைத்திட வேண்டும். அத்துடன் போதிய விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

போலீஸ் ரோந்துப் பணி: இரவு நேரத்தில் போலீசார் பஸ் நிறுத்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், பயணிகள் இரவு நேரத்தில் அச்சமின்றி பஸ் ஏறவும், பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்லவும் முடியும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப் பாதை:

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கின்றன. சென்னை, திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள், எல்லீஸ் சத்திரம் சாலை மேம்பாலத்தின் வழியாக திருப்பிவிட மாற்று ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் முத்தாம்பாளையம் மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிர்க்கலாம். மேலும், சென்னை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை அபாயகரமாக கடக்க வேண்டிய நிலையும் தவிர்க்கப்படும். எனவே, பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget