மேலும் அறிய

கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா - 250 இன காளை மாடுகள் பங்கேற்பு

மாடு மாலை தாண்டும் விழாவில் 250 நாட்டு இன காலை மாடுகள் பங்கேற்றன. இதில் கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அடுத்த ஜல்லிவாட நாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வீர ஜக்கம்மா கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

 


கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா -  250 இன காளை மாடுகள் பங்கேற்பு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த குல தெய்வ கோவில் திருவிழா 2 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதலுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று எருது ஓட்டம் விமரிசையாக நடைபெற்றது. கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகளை அந்தந்த ஊர்காரர்கள் அழைத்து வந்திருந்தனர். சாமி வழிபாட்டிற்குப் பிறகு எருதுகளை சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச் சென்று அங்கிருந்து எருதுகளை ஓட்டி வந்தனர். 13 ஊர் மந்தை எனப்படும் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

 


கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா -  250 இன காளை மாடுகள் பங்கேற்பு

இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்காக பாரம்பரியமாக வம்சாவழியாக தொடர்ந்து இந்த திருவிழாவை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். எருது ஓட்ட விழாவில் பங்கேற்று முதலாவதாக வரும் 3 காளைகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சை பரிசாக வழங்கப்படுகிறது. 


கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா -  250 இன காளை மாடுகள் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தோகமலை, குளித்தலை, அரவக்குறிச்சி, காக்காவாடி, ஏமுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமிஜி நேர்த்திக் கடனுக்காக எருது ஓட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகள், 5 ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் என நடைபெற்று வரும் திருவிழாவில் நாயக்கர் சமுதாய மட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள பல்வேறு சமுதாய மக்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர். 

 


கரூரில் கோலகலமாக நடந்த மாடு தாண்டும் விழா -  250 இன காளை மாடுகள் பங்கேற்பு



இந்த நிகழ்ச்சி போலீசார் அனுமதி பெற்ற பிறகு நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த எருது ஓட்டும்  திருவிழாவில் உறவு முறைகளை அழைத்து புத்தாடை உடுத்தி, சுவாமிக்கு படையல் இட்டு, அன்னதான வழங்கி அதைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சி உடன் இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget