மேலும் அறிய

வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 139 தீயணைப்பு வீரர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேட்ட மங்கலத்தில் 90 நாட்கள் நடந்த புதிய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி நிறைவு பெற்றது. இதை அடுத்து அவர்கள் சாகச நிகழ்ச்சி நடத்தி அசத்தினர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 1,204 புதிய தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தாம்பரம் மாநில பயிற்சி மையம் மற்றும் தற்காலிக பயிற்சி மையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.


வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

இந்த 9 பயிற்சி மையங்களில் ஒன்றான நொய்யல் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 139 தீயணைப்பு வீரர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.


வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

பயிற்சி முகாமில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துறை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்பு பணிகள், விபத்துகளில் இருந்து மீட்டல், நீச்சல் பயிற்சி, மழையேற்றம் பயிற்சி, யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல், நீர் விடு குழாய் பயிற்சி, உடற்பயிற்சி, தடை தாண்டும் பயிற்சி,ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல் உட்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

பயிற்சி வகுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி நிகழ்ச்சி அணிவகுப்பு, ஒத்திகை சாகச நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கேடயமும் வழங்கினர். நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவிற்கு திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேய பூபதி தலைமை தாங்கி பயிற்சி முடிவு பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் பயிற்சி நிறைவு பெற்ற 139 தீயணைப்பு வீரர்கள் தங்களது பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன், பயிற்சியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget