மேலும் அறிய

பள்ளி சீருடைகளை தரமாக தைக்காத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை.!

2024-2025 கல்வி ஆண்டிற்கான கட்டணமில்லா சீருடை தைப்பதற்கான ஆலோசனை கூட்டதில் மாணவர்களின் சீருடைகளை தரமாக தைக்காதவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2024-2025 கல்வி ஆண்டிற்கான கட்டணமில்லா சீருடை தைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்  தலைமையில் இன்று காந்தி நகரில் உள்ள ஸ்ரீ நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியில் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 1215 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் தையல் தொழிற்  கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2024 - 2025 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி சீருடைகள் தைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  மகளிருக்கான ஆலோசனைக் கூட்டத்தில்

 



பள்ளி சீருடைகளை தரமாக தைக்காத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை.!

மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:


திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2 ஆயிரத்து 174 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் 73 ஆயிரத்து 514 மாணவர்கள் மற்றும் 73 ஆயிரத்து 899 மாணவிகள் என மொத்தம் 1லட்சத்து 47 ஆயிரத்து 413 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு அரசு சார்பில் 4 செட் கட்டணமில்லா சீருடைகள் தைத்து வழங்கப்படுகிறது. அதாவது 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர்,மேல் சட்டையும் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை, சட்டையும் வழங்கப்படுகின்றன. 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு முழுக்கால் சட்டையும் (பேண்ட்) மாணவிகளுக்கு சுடிதார், மேல்கோட்டும்
வழங்கப்பட்டு வருகின்றன. சீருடைகளில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை பதிவு செய்து நிவர்த்தி செய்ய வேண்டும். சீருடைகளை தரமாக தைக்காத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.


பள்ளி சீருடைகளை தரமாக தைக்காத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை.!

தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளுடன் சீருடைகள் தைக்க வேண்டும், குறிப்பாக தேவைப்படும் இடங்களில் இரண்டு தையல்கள் போட வேண்டும் கேன்வாஸ் காலர் வைத்து தைக்க வேண்டும், நைலான் பட்டன்கள் பயன்படுத்த வேண்டும். சரியான அளவில் அழகாகவும் தரமாகவும் சீருடைகளை தைத்து வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் பயன் அடைவது மட்டுமல்லாமல் மகளிர் தையல் கூட்டுறவு சங்க பெண்களுக்கும் நல்ல வருவாயுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஏற்றார்போல் அழகாகவும் தரமாகவும் விரைந்து தைத்து தர மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ மூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யா, மாவட்ட தொழிற் கூட்டுறவு அலுவலர் எம்.ஜெகதீசன், தொழிற்கூட்டுறவு மேற்பர்வையாளர் ராஜபிரகாஷ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget