மேலும் அறிய

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதுதான்: பி.சுசீலா முன்னிலையில் மேடையிலேயே பாடிய முதல்வர் ஸ்டாலின்!

சுசீலாவுடைய பாட்டை நான்‌ எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில்‌ பயணம்‌ செய்யும்போது, காரில்‌ கேட்டுக்கொண்டே போவேன்‌.

டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் பாடியது கலகலப்பை ஏற்படுத்தியது.  

விழாவில் பின்னணிப் பாடகி பி.சுசீலா, இசைக் கலைஞர் பி.எம்‌. சுந்தரம்‌ ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதை பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் சிறப்பு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

’’இன்றைக்கு இசைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சார்பில்‌, பத்மபூஷன்‌ பி.சுசீலா, பி.எம்‌. சுந்தரம்‌ என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டரேட்‌ பட்டம்‌ கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம்‌. இதன்‌ மூலமாக, டாக்டர்‌ பட்டமும்‌ பெருமை அடைகின்றது.

எனக்கு மிகவும்‌ பிடித்த பாட்டு

பாடகி சுசீலா அவர்களுடைய குரலில்‌ மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில்‌ நானும்‌ ஒருவன்‌. அவருடைய பாட்டை நான்‌ எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில்‌ பயணம்‌ செய்யும்போது, காரில்‌ கேட்டுக்கொண்டே போவேன்‌. எனக்கு மிகவும்‌ பிடித்த பாட்டு, அடிக்கடி நான்‌ பல இடங்களில்‌ அதை பாடியிருக்கிறேன்‌.

“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை;

உன்‌ நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை;

காயும்‌ நிலா வானில்‌ வந்தால்‌ கண்ணுறங்கவில்லை;

உன்னை கண்டு கொண்ட நாள்‌ முதலாய்‌ பெண்ணுறங்கவில்லை”.

அதனால்‌ மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன்‌ வணக்கம்‌ சொல்லி விட்டுதான்‌, நான்‌ உங்கள்‌ ரசிகன்‌ என்று சொன்னேன். வெளிப்படையாகவே சொன்னேன்‌.

இந்த இரண்டு மேதைகளுக்கு டாக்டரேட்‌ பட்டம்‌ கொடுத்து பெருமைப்படுத்தி இருக்கிறோம்‌. இதன்‌ மூலமாக டாக்டரேட்‌ பட்டமும்‌ பெருமை அடைகிறது. பாடகி சுசீலா குரலில்‌ மயங்காதவர்களே நிச்சயமாக எல்லோருக்கும்‌ பட்டங்கள் வழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌! பெருமைப்படுகிறேன்‌.

இசைக்கும்‌, என்‌ குடும்பத்துக்கும்‌ நெருக்கமான உறவு

இசைக்கும்‌, என்‌ குடும்பத்துக்கும்‌ நெருக்கமான உறவு உண்டு! என்னுடைய தாத்தா முத்துவேலர்‌ பாட்டு எழுதுவதில்‌ மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும்‌ வல்லவர்‌. அதேபோலதான்‌, தலைவர்‌ கலைஞரும்‌ கவிதைகள்‌ மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார்‌. அவர்‌ பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும்‌ அவருக்கு நன்றாக தெரியும்‌. இசையை கேட்டவுடனே, அதில்‌ சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார்‌. அந்தளவுக்கு வல்லமை பெற்றிருந்தார்‌.

அடுத்து, விண்ணோடும்‌ முகிலோடும்‌ விளையாடும்‌ வெண்ணிலவே' உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா “தமிழிசைச்‌ சித்தர்‌” சிதம்பரம்‌ ஜெயராமன்‌‌. அந்த வகையில்‌ எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.’’

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget