மேலும் அறிய

CM MK Stalin: குற்றங்களை தடுப்பதுடன் மக்களை கனிவுடன் நடத்தவேண்டியது காவல்துறையின் பொறுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் கறார்..!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் காவலர்கள் மத்தியில் பேசுகையில், காவல் துறையினர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றத்துடன் இணைந்து தண்டனை பெற்றுத் தருவதுடன், குற்றங்கள் நடைபெறாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்களை நீங்கள் நடத்தும் விதத்தைப் பொறுத்துதான் காவல்துறையினர் குறித்த பிம்பம் பொதுவெளியில் கட்டமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்த ஆய்வுக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 


CM MK Stalin: குற்றங்களை தடுப்பதுடன் மக்களை கனிவுடன் நடத்தவேண்டியது காவல்துறையின் பொறுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் கறார்..!

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்  எனவும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை முழுவதும் தடுக்க வேண்டும் எனவும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், எந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் போதைப் பொருள் விற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கள்ளசாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு, கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றை தடுக்கவேண்டும் என்று பலமுறை நான் அறிவுறுத்தியிருக்கின்றேன்.

இதைத் தொடர்ந்து குற்றங்கள் மிக மிகக் குறைந்துகொண்டு வருகிறது. முழுமையாக குறைந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன் அது உங்களுக்கும் தெரியும் குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமையவேண்டும்

போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமில்லை. எதிர்கால வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு குட்கா பான்மசாலா போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

கடந்த 2 ஆண்டுகளாக ஆகஸ்ட் 11 அன்றைக்கு என் தலைமையில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தியதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இனி கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்த வரை பள்ளி

மாணவர்களிடையே பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு

ஏற்படுத்துதல் மற்றும் குற்றவாளிகளுக்கு ஃபோக்சோ சட்டத்தின்கீழ்

தண்டனை பெற்றுதர சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல் மற்றும்

ஃபோக்சோ வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை பெற்றுத்

தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்

எஸ்பி மற்றும் டி.எஸ்.பி. உங்கள் வரம்புக்குள்ளாக பதியப்படும் அனைத்து

வழக்குகளையும் தொடர்ந்து கண்காணித்து சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்

•நீதிமன்ற நிலுவை வழக்குகளை கண்காணித்து,

சாட்சிகள் மற்றும்

தேவையான தரவுகளை நீதிமன்றத்தில் வழங்கி தண்டனை பெற்று

தரவேண்டும்

குற்றப்பத்திரிகை பதியப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாத வழக்குகளை உடனடியாக நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்

நீதிமன்றங்களுடன் இணைந்து இந்த பணிகளை துரிதப்படுத்தி உடனடியாக தண்டனை வாங்கித் தந்தால் மட்டும்தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும்.

பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை நீங்கள் நடத்துகின்ற விதத்தை பொறுத்துத்தான் காவல்துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும் அதை உணர்ந்து பொறுப்புடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும்

இதற்காகத்தான் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்களை நியமித்திருக்கிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதை எஸ்.பி. டி.எஸ்.பி., ஆகியோர் உறுதி செய்யவேண்டும். 

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சரியான தீர்வு காணப்படவேண்டும்

பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள் எனவே, சட்டப்படி மேல்நடவடிக்கை எடுத்து, அந்த விவரங்களை

மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும் இது பற்றி நானே மனுதாரர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளப் போகிறேன் காவல் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள இருக்கிறேன்

அதனால், ஒவ்வொரு மனு மீதும் சரியான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவேண்டும் என்று நான் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன்.

சில மாவட்டங்களில், காவல் கண்காணிப்பாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது இப்படியான புகாருக்கு இடமில்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் உங்களிடம் குறையை சொல்ல வரும்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டிப்பாக அங்கு இருக்கவேண்டும் எனவும் பேசியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
Embed widget