மேலும் அறிய

''கேரளா போல நடந்துவிடக்கூடாது'' விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏன் அனுமதிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால், தமிழ்நாடடில் கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில பேசியதாவது,

“ நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்.  நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமின்றி, மன்றத்தில் உள்ள அனைவருக்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அதிளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறது.

கேரள மாநிலத்திலே ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாக தடுக்கப்படவில்லை. அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது.


'கேரளா போல நடந்துவிடக்கூடாது'' விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்!

அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது. 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், பொதுமக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனை கருத்திலே கொண்டு, 15.9.2021 வரை அனைத்து சமய விழாக்கள் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொருந்தும்.

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தவிர, தனி நபர்களை பொறுத்தவரையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை மனதிலே கொண்டுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.


'கேரளா போல நடந்துவிடக்கூடாது'' விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்!

இதையொட்டி, நான் இன்னொரு அறிவிப்பையும் நான் இங்கே வெளியிட விரும்புகிறேன். நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக்காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடரந்து வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்ற ஆண்டும், இந்தாண்டும் கொரோனா தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அந்த மாநில அரசு கருத்தில் கொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். “

இவ்வாறு அவர் பேசினார்.  

தலைப்பு செய்திகள்

TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
திருமுடிவாக்கத்தில் தென்னரசு அதிரடி விசிட்! கலெக்டருடன் நேரில் சென்றதன் பின்னணி என்ன?
திருமுடிவாக்கத்தில் தென்னரசு அதிரடி விசிட்! கலெக்டருடன் நேரில் சென்றதன் பின்னணி என்ன?
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
உஷார் புதுச்சேரி! தரம் குறைந்த 2 மாத்திரைகளுக்கு அதிரடி தடை - உங்க வீட்டிலேயும் இந்த மருந்து இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க!
உஷார் புதுச்சேரி! தரம் குறைந்த 2 மாத்திரைகளுக்கு அதிரடி தடை - உங்க வீட்டிலேயும் இந்த மருந்து இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget