மேலும் அறிய

சென்னை மழை; உணவு, தங்குமிடத்துக்கு தயார் நிலையில் தேமுதிக அலுவலகம் - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு

தாழ்வான பகுதிகளில்‌ இருப்பவர்கள்,‌ மழை நீரால்‌ பாதிக்கப்‌ பட்டவர்கள்‌ தேமுதிக அலுவலகத்தை (கேப்டன்‌ ஆலயம்‌) தங்க பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌- பிரேமலதா.

சென்னை மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''சென்னை மட்டுமில்லாமல்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ கனமழை எச்சரிக்கை என்று வானிலை மையம்‌ தொடர்ந்து எச்சரித்துக்‌ கொண்டு இருக்கிறது. தமிழகம்‌ முழுவதும்‌ அதீத கனமழை ரெட்‌ அலர்ட்‌ என்கின்ற செய்தியைத்‌ தொடர்ந்து தொலைக்‌காட்சிகளில்‌ ஒளிபரப்பாகிறது.

தாமதமில்லாமல் அத்தியாவசியப் பொருட்கள்

அனைத்து அமைச்சர்களும்‌, அதிகாரிகளும்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மக்களுக்குத்‌ தேவையான உதவிகளைச்‌ செய்து இந்த மழைக்காலத்தில்‌ மக்களைப்‌ பாதுகாக்க வேண்டும்‌. சென்னைக்கு மட்டும்‌ முக்கியத்துவம்‌ தராமல்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரை, அத்தியாவசிய பொருட்கள்‌, என அனைத்தும்‌ தாமதமில்லாமல்‌ கிடைக்கச்‌ செய்ய வேண்டும்‌.

முக்கியமாக மலைப்‌ பகுதிகள்‌, தாழ்வான பகுதிகள்‌, குடிசை பகுதிகள்‌, மருத்துவமனைகள்‌, பள்ளிகள்‌, இருக்கின்ற பகுதிகளில்‌ அதிக கவனம்‌ செலுத்தி இந்த மழை வெள்ளம்‌ மக்களை எந்த விதத்திலும்‌ பாதிக்காத வண்ணம்‌ அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

எந்தத் திட்டமும் நூறு சதவீதம்‌ முடியவில்லை

நான்கு ஆண்டுக்காலம்‌ ஆட்சியில்‌ இருக்கும்‌ திமுக அரசு நான்கு ஆண்டுக்‌ காலமும்‌ மழை வெள்ளம்‌ ஏற்படும்‌போது 95 சதவீதம்‌ வேலைகள்‌ நிறைவு பெற்று விட்டதாகச்‌ சொல்லும்‌ அரசு இன்றைக்கு வரைக்கும்‌ எந்த வித வேலைகளையும்‌ முடித்ததாக தெரியவில்லை. மழைநீர்‌ வடிகால்‌ திட்டமோ, மெட்ரோ திட்டமோ இன்று வரை நூறு சதவீதம்‌ முடியவில்லை.

எனவே சாலையில்‌ செல்பவர்கள்‌,  இரண்டு சக்கர வாகனங்கள்‌ , நான்கு சக்கர வாகனங்களில்‌ செல்பவர்கள்‌ என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர்‌. ஏற்கனவே மூன்று உயிர்கள்‌ மழை தேங்கி இருக்கும்‌ குழியில்‌ விழுந்து இறந்ததாக செய்திகள்‌ வந்துகொண்டு இருக்கின்றது. மின்சாரத் துறையையும்‌ இந்த அரசு உடனடியாக துரிதப் பணிகளில்‌ ஈடுபடுத்த வேண்டும்‌.

எங்கெல்லாம்‌ மின்‌ வெட்டு பாதிப்பு, மின்‌ கம்பங்கள்‌ சாய்வதும்‌, உயர்‌ மின்‌ அழுத்தக் கம்பிகள்‌ அறுந்து விழுவதை உடனடியாக கண்காணித்து மக்களுக்குப்‌ பாதிப்பு இல்லாமல்‌ பாதுகாக்க வேண்டும்‌. மக்களுக்குத்‌ தேவையான இடவசதி, மருத்துவ வசதி என அனைத்தையும்‌ தயார்‌ நிலையில்‌ வைத்து மழைக்‌ காலத்தில்‌ மக்களைக்‌ காக்க வேண்டியது இந்த அரசின்‌ கடமை.

தேமுதிக அலுவலகத்தைப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌

தாழ்வான பகுதிகளில்‌ இருப்பவர்கள்,‌ மழை நீரால்‌ பாதிக்கப்‌ பட்டவர்கள்‌ தேமுதிக அலுவலகத்தை (கேப்டன்‌ ஆலயம்‌) தங்க பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌. உங்களுக்கு வேண்டிய உணவுகள்‌ அங்கு வழங்கப்படும்‌.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள்‌, நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ அவரவர்கள்‌ இருக்கும்‌ பகுதிகளில்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்குத்‌ தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்‌.

“இயன்றதை செய்வோம்‌ இல்லாதவர்க்கே” என்ற நமது தலைவரின்‌ கொள்கை படி நம்மால்‌ இயன்ற உதவியை மழை வெள்ளத்தில்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உதவ வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌''.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Tamilnadu Roundup: பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
IND Vs ENG Test: பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் - ”பேஸ்பால் காணோமாம்”
IND Vs ENG Test: பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் - ”பேஸ்பால் காணோமாம்”
IND Vs ENG Test: ”டைம் இல்ல, டயர்டா இருக்கு” - ஸ்டோக்ஸ், உங்களுக்குன்னா மட்டும் வலிக்குதா? கம்பீர் கேள்வி
IND Vs ENG Test: ”டைம் இல்ல, டயர்டா இருக்கு” - ஸ்டோக்ஸ், உங்களுக்குன்னா மட்டும் வலிக்குதா? கம்பீர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema
தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Tamilnadu Roundup: பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
IND Vs ENG Test: பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் - ”பேஸ்பால் காணோமாம்”
IND Vs ENG Test: பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் - ”பேஸ்பால் காணோமாம்”
IND Vs ENG Test: ”டைம் இல்ல, டயர்டா இருக்கு” - ஸ்டோக்ஸ், உங்களுக்குன்னா மட்டும் வலிக்குதா? கம்பீர் கேள்வி
IND Vs ENG Test: ”டைம் இல்ல, டயர்டா இருக்கு” - ஸ்டோக்ஸ், உங்களுக்குன்னா மட்டும் வலிக்குதா? கம்பீர் கேள்வி
OP Sindoor Parliament: நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 29-ம் தேதி செவ்வாய் கிழமை எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஜூலை 29-ம் தேதி செவ்வாய் கிழமை எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்க தெரியுமா.?
Donald Trump: ட்ரம்ப் சார், சும்மாவே இருக்க மாட்டீங்களா.?; தாய்லாந்து-கம்போடியா சமாதானம் - இந்தியாவுடன் ஒப்பீடு
ட்ரம்ப் சார், சும்மாவே இருக்க மாட்டீங்களா.?; தாய்லாந்து-கம்போடியா சமாதானம் - இந்தியாவுடன் ஒப்பீடு
Coimbatore Power Cut : கொங்கு மக்களே இன்று(28.07.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Coimbatore Power Cut : கொங்கு மக்களே இன்று(28.07.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Embed widget