தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? சென்னை காவல் ஆணையரின் அதிரடி விளக்கம்
எல்லா கட்சிக்கு எந்த விதியை பின்பற்றுகிறோமோ அதே விதியை தான் தவெக கட்சிக்கு கடைபிடிக்கப்பட்டது என்று அருண் ஐபிஎஸ் தெரிவித்தார்

தவெக போராட்டத்துக்கு அனுமதி எல்லாம் மறுக்கப்படவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருமலா வழக்கு:
திருமலை பால் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் நவீனை குறித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது அது தற்கொலை தான் என தெரிகிறது,
இந்த விசாரணையை மேற்கு மண்டலம் இணை ஆணையர் அவர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார் என எங்களுக்கு தகவல் இல்லை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதை (சிசிபி) மத்திய குற்றப்பிரிவு விசாரிகளை செய்யலாம் அதற்குள் உள்ளான தொகை அந்தந்த காவல் நிலைய இணை ஆணையர் உத்தவரின்படி விசாரணை நடைபெறும்..
ஆணையர் மீது நடவடிக்கை
இந்த சம்பவத்தில் 40 கோடிக்கு ரூபாய்க்கு மேல் கையாடல் என்பதால் அதனை துணை ஆணையர் விசாரணை நடத்தி இருக்கக் கூடாது அங்கு நான் தவறு நடந்திருக்கிறது. அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், இறந்தவரை இதுவரை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கப்படவில்லை, நவீன் ஜூன் 24 தேதி அவர் வேலையில் இருந்து வெளியேறி இருக்கிறார் அதன் பிறகு தான் அவர் 44,000 கோடி கையாடல் செய்கிறது தெரியவந்துள்ளது..
நவீன் கைகள் கட்டப்பட்டு இறந்து இருப்பதாக தெரிகிறது, இதுபோன்று பல தற்கொலை வழக்குகளில் கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பல வழக்குகள் உள்ளது..
சென்னையில் ஏழுக்கிணறு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கொலை சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தேகப்படும் நபர்கள் காரில் சென்றதாக தெரிகிறது, அதைத்தொடர்ந்து ஐந்து பேரை கைது செய்து இருக்கிறோம், இதில் ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சியில் சேர்ந்த இவர்களுக்கு இந்த முறை முறை பதவிக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பதற்கான காரணமாக கொலை செய்யப்பட்ட நபர் இருந்ததாக குறிப்பிடுகிறது, அந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டதாக தற்போது விசாரணையில் தெரிகிறது,
நுங்கம்பாக்கம் வழக்கு:
நுங்கம்பாக்கம் மதுபானம் கூடத்தில் நடந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை செய்யும் போது போதை பொருள் சம்பந்தமாக பலர் அதில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் இதில் 27 பேர் குற்றவாளிகளாக கண்டுபிடித்து அதில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது,
இந்தியா முழுவதும் போதைப் பொருட்களை சப்ளை செய்யும் அனைத்து முக்கிய 23 வெளிநாட்டவர்களையும் கைது செய்துள்ளோம்,57 முக்கிய நெட்வொர்க் புள்ளிகளை கைது செய்துள்ளோம்,
அனுமதி தரவில்லையா?
தவெக போராட்டத்திற்கு நீங்கள் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு ....
இதுவரையில் நாங்கள் அனுமதி தராமல் இருந்ததில்லை, எல்லா கட்சிக்கு எந்த விதியை பின்பற்றுகிறோமோ அதே விதியை தான் தவெக கட்சிக்கு கடைபிடிக்கப்பட்டது, அவர்களாக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றதற்கு நாங்கள் காரணம் இல்லை, என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.






















