மேலும் அறிய

சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள்- அன்புமணி.

சாதிவாரி கணக்கெடுப்பில் குழப்பங்களை தவிர்க்க சாதி பட்டியலை இணைத்து தேர்வு செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவின் 16 மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதிகளை குறிப்பிடுவதற்கான இடம் காலியாக விடப்பட்டு, அதில் சாதியின் பெயரை எழுதும் முறை கடைபிடிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. தோல்வியடைந்த இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே சிதைக்கப்பட்டு விடக்கூடும்.

நாட்டில் சமூகநீதியை முழுமையாக பாதுகாக்கும் நோக்கத்துடன், மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய ஆட்சியாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதன் பயனாக  2027ஆம் ஆண்டில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறும்.

முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களிலும்,  இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வீட்டுப்பட்டியல் தயாரிக்கும் பணி ஆகஸ்ட் 1&ஆம் தேதி முதல் 31&ஆம் தேதி வரை நடைபெறும். இதில் வீடுகளில் உள்ள வசதிகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். சாதி உள்ளிட்ட  தனி நபர் விவரங்கள் இரண்டாம் கட்டமான மக்கள்தொகை எண்ணிக்கையின் போது சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமான மக்களை எண்ணும் பணி நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில், அதற்கான முன்னோட்ட ஆய்வுப் பணிகள் 16 மாநிலங்களில் இப்போது நடைபெற்று வருகின்றன. அதில் ஒவ்வொருவரிடமும் மாதிரி வினாக்கள் தெரிவிக்கப்பட்டு, அது குறித்த விவரங்கள் பெறப்பட்டு  செயலிகளில் பதிவு செய்யப்படும். மாதிரி வினாக்கள் பட்டியலில் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு,  அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை சாதிவாரி கணக்கெடுப்பில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது.

இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு மாநிலத்தில் அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது குழப்பத்தை விளைவிக்கும்.

அதற்கு மாறாக, அரசின் பட்டியலில் உள்ள சாதிகளை வரிசைப்படுத்தி, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்கச் செய்து, அந்த சாதியின் பெயரையும், எண்ணையும் பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும். அப்போது தான் அரசிடமுள்ள சாதிகள் விவரமும், மக்கள் தெரிவிக்கும் சாதிகள் விவரமும் ஒத்துப்போகும்.

2011&ஆம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல் தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப் பட்டது. அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இந்தியாவில் 1931&ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் னணக்கெடுப்பு விவரங்கள் கைவிடப்பட்டன.

அதே நேரத்தில், கடந்த 2023&ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப் பட்டது. அதன் பயனாக பிகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் தான்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமே, ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகை விவரங்களைக் கண்டறிந்து, அவர்களின் சமூக, பொருளாதார சூழல்களுக்கு ஏற்ற வகையில் சமூகநீதி   மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது தான். மாறாக, குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், சாதி  விவரங்கள் பதிவு செய்யப்பட்டால், அது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தையே சிதைத்து விடும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்களை எண்ணும் பணி நடைபெறும் போது, அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை  பதிவு செய்யும் முறையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கடைபிடிக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.  

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
TVK Budget: விஜய் அரசின் முதல் பட்ஜெட்.. தவெக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகள் என்னென்ன?
TVK Budget: விஜய் அரசின் முதல் பட்ஜெட்.. தவெக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் அறிவிப்புகள் என்னென்ன?
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget