மேலும் அறிய

" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

காதலித்து திருமணம், முதல் மனைவி விஷயம் தெரிந்ததால் கொலை – ஆட்டோ ஓட்டுநர் கைது

கோவிலில் ரகசிய திருமணம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள மகதி பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய பவானி. இவர் பி.எஸ்.சி பட்டப் படிப்பு முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள திகளாரபல்ய பகுதியில் உள்ள செல்போன் விற்பனை நிலையத்தில் பில்லிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.

வேலை காரணமாக துளசி நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பவானிக்கு அதே பகுதியை ஆட்டோ ஓட்டுநரான 33 வயதுடைய சந்திரசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் உறவு தீவிரமடைந்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு இருவரும் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

நடத்தையில் சந்தேகம் - ஏற்கனவே திருமணம்

திருமணமாகி சில மாதங்கள் கடந்த நிலையில் , சந்திரசேகர் நடத்தையில் பவானிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அவரது செயல்பாடுகளை கவனித்த போது சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பவானி, நடந்த விஷயங்களை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். மேலும், சந்திரசேகருடன் வாழ விருப்பமில்லை பிரிய வேண்டும் என்று முடிவு செய்த பவானிக்கு , அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி பவானியின் சமூக வலைதள கணக்கில் சந்திரசேகரை திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஸ்டோரி வைத்திருப்பதை கவனித்த அவரது உறவினர்கள் இதுகுறித்த தகவலை பவானியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பவானியின் தந்தை பவானியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அவர் பாவினியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்த்திருக்கிறார்.

வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பவானி உயிரிழந்த நிலையிலும் அவருக்கு அருகிலேயே சந்திரசேகர் மயக்க நிலையிலும் கிடந்துள்ளனர். இதையடுத்து, பவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அதன்படி சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், பவானி தன்னை விட்டு பிரிய முடிவு செய்ததால் மன வருத்தத்தில் இருந்த சந்திரசேகர் தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு பவானியை தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

ஆனால் பவானி மறுப்பு தெரிவிக்கவே அவரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தில் இருந்த சந்திசேகர் பவானிக்கு வலுக்கட்டாயமாக விஷத்தை கொடுத்த போது அவர் அதனை வாந்தி எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாவனி உயிர் பிழைத்து விடுவாரோ என அச்சமடைந்த சந்திரசேகர் வீட்டில் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அவரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget