மேலும் அறிய

மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் உறுதி

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை விரைவில் பெற்றுத்தருவதுடன், இவர்களுக்கு இலங்கை திரும்பி செல்ல விருப்பம் உள்ளவர்களை சட்டரீதியாக தாயகம் திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தந்த பகுதி முகாம்களில் தங்கியுள்ள அகதிகள்  மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும் அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மறுவாழ்வு முகாம்களிலிருந்து பிற ஊர்களுக்குச் சென்று வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் தொழிலாளிகளை அழைத்துச் சென்று அடிமைகளாக வேலை வாங்கி வந்தனர். இதற்கு ஏதுவாக மண்டபத்தில் அலுவலகம் ஒன்றை அமைத்து, அங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லும் பணிகளை ஆங்கிலேயர்கள் செய்துவந்தனர். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஏற்கெனவே மண்டபத்தில் இயங்கிவந்த அலுவலகம் மறுவாழ்வு முகாமாக மாற்றப்பட்டது. இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவழியினர் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தில் உள்ள அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இதனிடையே, இலங்கையில் நடந்த இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களும் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் உறுதி

1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் தீவிரமான நிலையில், அங்கே தமிழர்கள் உயிர்வாழ வழியின்றி தினந்தோறும் அகதிகளாக வரத் தொடங்கினர். இதனால் மண்டபத்தின் முகாம் நிரம்பி வழியத் தொடங்கியது. மேலும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளி அமைப்பினரும், அகதிகளுடன் முகாம்களில் தங்கியிருந்தனர். இதனால் அகதிகள் முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தினால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அகதி முகாமில் தங்கியிருந்த போராளிகள் இலங்கைக்குத் தப்பிச் சென்றனர். இதனால், அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் உறுதி

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம்,  மண்டபம் அகதிகள் முகாமிற்கு ஆய்வுக்காக வந்த மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை விரைவில் பெற்றுத்தருவதுடன், இவர்களுக்கு இலங்கை திரும்பி செல்ல விருப்பம் உள்ளவர்களை சட்டரீதியாக தாயகம் திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டபம் இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்த பின்னர்  தெரிவித்தார்.

முன்னதாக, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ் இன்று  ஆய்வு செய்தார். பின் இலங்கை அகதிகள் வசிக்கும் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது அவரிடம், இந்திய குடியரிமை வழங்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அகதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம்  பேசிய ஜெசிந்தா லாசரஸ், தமிழகம் முழுவதும் தங்கியுள்ள இலங்கை அகதிகள்  முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால்,  முறையாக ஆவணம் பெற்று சொந்த நாட்டுக்கு செல்வது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் யாரும்  மனு அளிக்க வில்லை. அப்படி மனு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடு நிச்சயம் மாநில அரசு சார்பில் எடுக்கப்படும் என்றார்.

மேலும் சிலர், தாங்கள் தொடர்ந்து தமிழகத்திலேயே வசிக்க ஆசைப்படுவதால் எங்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். அது குறித்தும் தமிழக முதல்வர் கடிதம் மூலமாக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற்று இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோன காலத்தில் இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்வது அதிகரித்துள்ளதால் அதனை தடுக்க கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த  அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதுடன், அகதிகள் நல மறுவாழ்வு துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்ட்டு வருகிறது என்றும் கூறினார்.

மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் உறுதி

கடந்த பல ஆண்டுகளாகவே அகதிகளாக தஞ்சம் அடைந்து தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்கள், இந்திய குடியுரிமை பெற்றால் சுதந்திரமாக சென்று எங்கும் வேலை செய்யலாம் கல்வியறிவு பெறலாம் என்ற பல்வேறு காரணத்திற்காக, இந்திய குடியுரிமை கேட்டு வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது இலங்கை அகதிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget