மேலும் அறிய

குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு

குறி பார்க்க வந்த இடத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கோடாங்கி கைது

குடும்ப பிரச்சனைக்காக குறி கேட்க சென்ற பெண்

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே பாளையம் பட்டி பகுதியில் வசித்து வருபவர் தூய்மை பணியாளரான 42 வயதுடைய சாந்தி. இவரது கணவர் பாண்டியராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் 17 வயதுடைய மகன் சந்தீப் குமார் மற்றும் 13 வயதுடைய மகள் யாழினி ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பாண்டியராஜின் அக்காவான 45 வயதுடைய ஸ்ரீதேவி என்பவரின் கணவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே அவரும் பாளையம்பட்டியில் உள்ள அருந்ததியர் காலனி வீட்டில் வசித்து வரும் சாந்தியுடன் உடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சாந்தி என்பவர் தனது குடும்பத்திற்கு குறி பார்ப்பதற்காக காரியாபட்டி அருகே உள்ள கள்ளக் குறிச்சி மணி நகரைச் சேர்ந்த கோடாங்கி முத்து என்பவரிடம் சென்றுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

குடும்ப வறுமை தீர சில பரிகாரம் செய்ய வேண்டும் என பாளையம்பட்டியில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு கோடாங்கி முத்து என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்து குறி பார்த்து பரிகாரம் செய்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வரும் சாந்தியிடம் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதற்கு சாந்தி இணங்க மறுத்ததால் பலமுறை தொலைபேசியில் பேசி தனது ஆசைக்கு இணங்க வேண்டுமென வற்புறுத்தி வந்த நிலையில் சாந்தி அதற்கு இணங்க தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த கோடாங்கி முத்து , கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இதனை தொடர்ந்து சாந்தி மற்றும் ஸ்ரீதேவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் தீக்காயம் அடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீ தேவியை மீட்டு அவசர சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சந்தீப் குமார் மற்றும் யாழினி ஆகியோர் தீ காயங்களின்றி உயிர் தப்பினர். தீக்காயுடன் மீட்கப்பட்ட சாந்தி மற்றும் ஸ்ரீ தேவி இருவருக்கும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விருதுநகரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீக்காயம் அடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தி என்பவர் தான் கணவர் இல்லாமல் தனியாக வசித்து வருவதை பயன்படுத்தி தன் வீட்டிற்கு குறி பார்க்க வந்த முத்து என்பவர் தன்னை தொலைபேசியிலும் நேரடியாகவும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு முடியாது என்று கூறிய நிலையில் அவர் செயலை செய்திருக்கலாம் என்று அளித்த தகவல் அடிப்படையில் கோடங்கி முத்துவை அருப்புக்கோட்டை நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
கல்லூரி மாணவி குளிப்பதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்
கல்லூரி மாணவி குளிப்பதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்
அடுத்த 3 மணி நேரத்திற்குவெளியே போகாதீங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு திடீர் எச்சரிக்கை!
அடுத்த 3 மணி நேரத்திற்குவெளியே போகாதீங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு திடீர் எச்சரிக்கை!
" அப்பாகிட்ட சொல்லாத " கள்ளக் காதலனுடன் சினிமாவுக்கு சென்ற தாய் - போட்டுக் கொடுத்த மகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget