மேலும் அறிய

Helicopter Crash : ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்.. ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்...!

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணமடைந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

Helicopter Crash : அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணமடைந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

உடல் தகனம்

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்லம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மேஜர் ஜெயந்த் (35) மற்றும் லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர். மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து, அவரது சொந்த ஊரான  தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அமைச்சர் சார்பில் ஐ.பெரியசாமி, ஆட்சியர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்.  இதனை அடுத்து, அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று முழு ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க  சொந்த ஊரான பெரியகுளத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் இருந்தனர்.   இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு சங்கே என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது அருணாச்சல பிரதேசத்தின்  மண்டாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறிது நேரம் கழித்து 2 பேரின் உடல்களை மீட்டனர். அதில் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்நிலையில், மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

ஆறுமுகம் என்பவரின் மகனான ஜெயந்த் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர்ந்து, அதன் பிறகு மேஜராக பணிபுரிந்து வந்தார். ஜெயந்த்தின் மனைவி ஸ்டெல்லா சாராவுடன் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இவர் உயிரிழந்தது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கிடையில், உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

இரவில் நடைபெற்ற மரியாதை நிகழ்வு.. சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது ராணுவ வீரர் ஜெயந்தின் உடல்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget