![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KC Veeramani: வேலுமணி வரிசையில் வீரமணி.. அறப்போர் இயக்கத்தின் அடுத்த டார்கெட்!
வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.65 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்
![KC Veeramani: வேலுமணி வரிசையில் வீரமணி.. அறப்போர் இயக்கத்தின் அடுத்த டார்கெட்! Arappor Iyakkam's Disproportionate Assets Complaint against former AIADMK Minister KC Veeramani KC Veeramani: வேலுமணி வரிசையில் வீரமணி.. அறப்போர் இயக்கத்தின் அடுத்த டார்கெட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/17/3d80a995d2a1cba187a1828c7c03fc00_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.65 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. அண்மையில் அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியதை அடுத்து தற்போது கே.சி.வீரமணி மீது தற்போது இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறப்போர் இயக்கத்தின் புகாரில், "முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி அவர்கள் 2011 முதல் 2021 வரை பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், தன் வருமானத்திற்கு அதிகமாக ரூ 76.65 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளது.
திரு கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் 2016 முதல் 2021 வரை வணிகவரித்துறை மற்றும் நிலப்பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தார் அதன் முன் 2013 முதல் 2016 வரை கல்வித்துறை, விளையாட்டு துறை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
2011ல் திரு கே. சி. வீரமணி அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் நிகர சொத்து ரூ. 7.48 கோடி என்று தெரிவித்திருந்தார். ஆனால் 2011 முதல் 2021 வரை அவர் மற்றும் அவர் குடும்பத்தினரும் சேர்த்த சொத்துகளின் மதிப்பு 91.2 கோடி ரூபாயாகும். 2011 முதல் 2021 வரை அவர் வாங்கிய கடன்களை கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து ரூ 83.65 கோடி ஆகும். மேலும் இந்த 10 ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமிப்பு செய்தது அதிகபட்சமாக ரூ 7 கோடி. எனவே அவர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து ரூ 76.65 கோடி ஆகும்
இந்த சொத்தை கணக்கிடும்போது நாம் பெரும்பாலும் அவர் சொத்தை வாங்கிய விலையாக பதிவுத்துறையில் தெரிவித்திருந்தையே கணக்கு. செய்துள்ளோம். பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிர்ணயித்த (Guideline) மதிப்பை விட மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளது. இவரே பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்து இவர் துறையிலேயே அதிகாரிகளுடன் சேர்ந்து விலையை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியும் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே விசாரணையில் இவரது உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செய்தால் இங்கு சொல்லப்பட்ட தொகையை விட அது பல கோடி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அது அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையின் பொழுது கணக்கிட வேண்டும்.
முன்னாள் அமைச்சர் வீரமணி தன் பெயரில் உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் ரூ 43 கோடி அதிகமாகி உள்ளது. மேலும் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் ஆசையா சொத்துக்கள் பல வாங்கப்பட்டுள்ளது பெங்களூர், சென்னை. திருப்பத்தூர் என்று பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்கள் வாங்கி உள்ளார், ஹோசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் ரூ 100 க்கு 0.1 ஏக்கர் நிலம் அமைச்சரின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் பாப்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட் க்கு 2017-இல் சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் ரூ 15 கோடி செலவில் ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ் கட்டப்பட்டுள்ளது.
மேலும் பல நிலங்கள் முன்னாள் அமைச்சர் தனது தாயார் மணியம்மாள். சகோதரி தன்மானம் சுதா சுஷீலான பெயரில் வாங்கி அதே நாளிலோ அல்லது சில மாதங்களுக்கு பின்னரோ தன் பெயருக்கு தான பத்திரம் மூலம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மேலும் தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் 2015 ல் வாங்கப்பட்டது அதே வருடம் முன்னாள் அமைச்சரின் ஆர் எஸ் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றிக்கொண்ட ஆதாரத்தையும் இணைத்துள்ளோம். இப்படி முன்னாள் அமைச்சர் தன் உறவினர்களை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சேர்த்த ஆதாரங்களையும் இணைத்துள்ளோம்.
ஒட்டுமொத்தத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவர் குடும்பத்தினர் 2011 ல் வெறும் ரூ 7.48 கோடி சொத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சமாக ரூ 76,65 கோடி வருமானத்திற்கு மீறிய சொத்தை சட்ட விரோதமாக. குவித்துள்ளனர். இதை சரியாக விசாரித்தால் மேலும் பல கோடி ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்து கண்டறிய வாய்ப்புள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி உள்ளது. எனவே உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை இந்த புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் பிற குற்றவியல் சட்டங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவிட்டு விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)