மேலும் அறிய

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றத்திற்காக  ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோவளத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கைது செய்த காவல்துறை, அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ புதிய கார் மற்றொரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. மேலும், ஹரிநாடாரின் வங்கிக் கணக்கையும் காவல்துறை நேற்று  முடக்கியது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 7.2 கோடி ரூபாய் கமிஷன் தொகையை பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், உரிய நேரத்தில் கடன் தொகையை  திருப்பித் தரவில்லை. மேலும், போலி வங்கி கணக்கையும், காசோலைகளையும் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். 

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

தான் மோசடிக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்த தொழிலதிபர் வெங்கடரமண சாஸ்திரி, பெங்களூரு கப்பன்பார்க் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஹரிநாடாரின்  பனங்காட்டுப் படை கட்சி 44 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஹரிநாடார் 37632 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில்  3605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்கு எண்ணிக்கை 73985. திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70380 வாக்கு பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஹரி நாடார் பெற்ற சமூக வாக்குகளே ஆலடி அருணாவின் தோல்விக்கு வழிவகுத்தது.   

இதற்கிடையே, தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த பிறகு ஓய்வெடுப்பதற்காக ஹரி நாடாரும், அவாது கேரளா நண்பருமான ரஞ்சித் பணிக்கரம் கேரள மாநிலத்துக்கு சென்றிருக்கின்றனர். ரஞ்சித் பணிக்கரை கொல்லம் நகரில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த மே 4-ஆம் தேதி ஹரி நாடாரையும் காவல்துறை கைது செய்தது.    

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

 

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள ஹரி நாடாரிடம், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரனையில், ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget