மேலும் அறிய

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றத்திற்காக  ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோவளத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கைது செய்த காவல்துறை, அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ புதிய கார் மற்றொரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. மேலும், ஹரிநாடாரின் வங்கிக் கணக்கையும் காவல்துறை நேற்று  முடக்கியது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, 7.2 கோடி ரூபாய் கமிஷன் தொகையை பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், உரிய நேரத்தில் கடன் தொகையை  திருப்பித் தரவில்லை. மேலும், போலி வங்கி கணக்கையும், காசோலைகளையும் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். 

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

தான் மோசடிக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்த தொழிலதிபர் வெங்கடரமண சாஸ்திரி, பெங்களூரு கப்பன்பார்க் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஹரிநாடாரின்  பனங்காட்டுப் படை கட்சி 44 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஹரிநாடார் 37632 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில்  3605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்கு எண்ணிக்கை 73985. திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70380 வாக்கு பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஹரி நாடார் பெற்ற சமூக வாக்குகளே ஆலடி அருணாவின் தோல்விக்கு வழிவகுத்தது.   

இதற்கிடையே, தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த பிறகு ஓய்வெடுப்பதற்காக ஹரி நாடாரும், அவாது கேரளா நண்பருமான ரஞ்சித் பணிக்கரம் கேரள மாநிலத்துக்கு சென்றிருக்கின்றனர். ரஞ்சித் பணிக்கரை கொல்லம் நகரில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த மே 4-ஆம் தேதி ஹரி நாடாரையும் காவல்துறை கைது செய்தது.    

பணமோசடி வழக்கு: ஹரி நாடாரின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

 

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள ஹரி நாடாரிடம், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஹரி நாடார் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட  நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரனையில், ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது  

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget