ADMK: காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! கலக்கத்தில் சிவி சண்முகம்! அதிமுக-வில் நடப்பது என்ன?
சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏ-க்களை தன்வசம் இழுக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் பரபரப்பாகவே இயங்கி வருகிறது. ஆளுங்கட்சியாக தவெக-வும், எதிர்க்கட்சியாக திமுக-வும் அமர்ந்துள்ள நிலையில், 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக-வில் மோதல்:
எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அதிமுக-வில் தொடர்ந்து தோல்வி முகமே இருந்து வருகிறது. தற்போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்தின் தலைமையில் குறிப்பிட்ட எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், அவர்கள் எஸ்பி வேலுமணியை சட்டமன்ற அதிமுக தலைவராக அறிவிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான ஆதரவு எம்எம்ஏ-க்கள் தங்கள் ஆதரவை தவெக-விற்கு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் அமைச்சரவையில் இடம்பிடிக்க அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி:
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியே ஆகும். தவெக அமைச்சரவையில் இடம்பிடித்தாலும் கட்சியின் மூத்தவர்களுக்கே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதால் அவர்களின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு பெரிய ஆதாயம் கிடைக்காது என்று கருதுகின்றனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதாவது, சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பில் உள்ள எம்எல்ஏ-க்கள் தேர்தலுக்கு செய்த செலவை தாங்களே ஏற்பதாக உத்தரவாதம் அளித்து அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதிமுக-வில் காத்திருக்கும் சம்பவம்:
தனக்கு எதிராக செயல்பட்ட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தற்போது வரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறிவந்தாலும், பொதுக்குழு விரைவில் கூட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழு கூடினால் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த தருணத்தைப் பயன்படுத்தி சசிகலா தரப்பினர் மீண்டும் தலைமையை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சசிகலா - தினகரன் இடையே தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.
இதையறிந்த, சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பினர் தங்களது தரப்பின் எம்எல்ஏ-க்களிடம் ஆட்சியில் பங்கு கிடைத்தால் காத்திருப்பிற்கு பலன் கிட்டும் என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அதிமுக-வில் அடுத்தடுத்து வரும் நாட்களில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும்? என்பது மட்டும் உறுதியாக கூறலாம்.
Before You Go
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















