மேலும் அறிய

ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தினசரி சந்திக்கும் சவால்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

சிவபெருமானின் பஞ்சபூதங்களில் முதன்மையானதாக கருதப்படுவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செல்வதை சிவ பக்தர்கள் தங்களது தலையாய கடமையாக கருதி வருகின்றனர்.

இந்த சூழலில், சமீபகாலமாக ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை, கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக அண்ணாமலையாரை தரிசிப்பதில் சிரமங்கள் உண்டாகியுள்ளது.

வெளியூர் - உள்ளூர் பக்தர்கள் மோதல்:

சமீபகாலமாக திருவண்ணாமலைக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து ஏராளமான தெலுங்கு பேசும் பக்தர்கள் அதிகளவு வருவதால் அவர்களுக்கும் தமிழ் பக்தர்களுக்கும் இடையே சாமி தரிசனம் செய்வதிலும், வரிசையில் நிற்பதிலும் பல்வேறு கருத்து மோதல் ஏற்பட்டு வாக்குவாதங்கள் உண்டாகிறது. சில சமயங்களில் வெளி மாநில பக்தர்கள் இடையேயே மோதல் உண்டாகிறது.

ஆயிரங்கால் மண்டபம்:

திருவண்ணாமலை கோயிலில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிட கலையின் அடையாளம் இந்த ஆயிரங்கால் மண்டபம். ஆயிரம் தூண்களை கொண்ட இந்த மண்டபம் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதற்கு முன்பு அனைவரும் சென்று ரசிப்பதற்கு திறந்தே இருக்கும். ஆனால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்த பிறகு கட்டணி தரிசனத்திற்காக ஆயிரங்கால் மண்டபத்தை மறைத்து கம்பிகள் அமைத்து வரிசை அமைக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே சென்று அதன் அழகை ரசிக்க இயலாத சூழல் தற்போது உள்ளது. 

சிபாரிசுகள்:

அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழலில், சில பக்தர்கள் அங்கே பணியாற்றுபவர்கள் மற்றும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக சிபாரிசுகள் மூலமாக வரிசையில் நிற்காமல் திடீர், திடீரென உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், மணிக்கணக்கான காத்திருக்கும் பக்தர்கள் மேலும் காத்திருக்கும் அவல நிலை உண்டாகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பெரிய, பெரிய கோயில்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணிக்கை கொடுத்தாலே திருநீர் பொட்டலம்:

அண்ணாமலையாருக்கு பூஜித்த திருநீரை அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்படுகிறது. ஆனால், அந்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட திருநீர் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கு மட்டுமே அந்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திருநீர் வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் வழங்கப்படுவதில்லை. இது அண்ணாமலையார் கோயிலில் மட்டுமின்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோயில்களிலும் இதே நிலைதான் உள்ளது.

கோயில் அழகை ரசிக்க முடியாத சூழல்:

திருவண்ணாமலை கோயில் என்பது ஆன்மீக தலமாக மட்டுமின்றி தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இந்த கட்டிட கலைகள் என்பது இன்றுள்ள பொறியாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் சவால்தரும் ஒன்றாகும். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதற்கு முன்பு கோயிலின் பிரதான வாசலான ராஜகோபுரம் உள்ளே சென்றால் அருணகிரி நாதர் கோயிலுக்கு பின்புறம் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள மிகப்பெரிய நந்தியை ரசிக்க இயலும். ஆனால், தற்போது கட்டண தரிசனத்திற்கான வரிசை ராஜகோபுரம் உள்ளே நுழைந்தவுடன் தொடங்குவதால் பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் நந்தியை வணங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டண தரிசனத்தில் செல்பவர்களும் கம்பி இடைவெளியில் சென்று நந்தியை வணங்கினாலும் வரிசை போய்விடும் என்ற பதற்றத்தில் செல்வது இல்லை. 

அதேபோல, ராஜகோபுரம் அடுத்த கோபுரம் உள்ளே சென்ற பிறகு கட்டண தரிசனம் எடுக்கும் இடத்தில் உள்ள அழகான குளத்தை அனைவராலும் ரசிக்க முடியாத சூழல் உள்ளது. தடுப்புகளால் அந்த பகுதியில் பக்தர்கள் சென்று வர இயலாத நிலை உள்ளது. பின்னர், அண்ணாமலையார் அருகில் உள்ள அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அனைத்து பக்தர்களும் அமர்ந்து தரிசிக்கும் சூழல் முன்பு இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. மேலும், ராஜகோபுரம் வழியாக நந்தி பெருமானை வணங்கி அந்த கோபுர வாசல் வழியாக சென்று அதே வழியாக மீண்டும் வெளியே வரும் சூழல் இருந்தது. தற்போது அந்த சூழல் இல்லை.

மேலே கூறிய சிரமங்களால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சிரமங்களுக்கு புதியதாக அமைந்துள்ள தவெக அரசு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget