மேலும் அறிய

ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கு: டெப்பாசிட்தாரர்கள் முதலீட்டை திரும்பப்பெற முகாம்கள் அறிவிப்பு!

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்தவர்கள் தங்கள் தொகையை திரும்ப பெற முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்தவர்கள் தங்கள் தொகையை திரும்ப பெற மாவட்டங்கள் வாரியாக முகாம்கள் தேதிகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

1678 கோடி மோசடி?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும்  வழக்குப்பதிவு செய்தனர். 

நிறுவனம் தரப்பு வாதம்

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆரூத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வங்கி கணக்குகள் முடக்கபட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், பணத்தை திரும்ப தர தயாராக இருப்பதாகவும் வாதத்தின்போது தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட்  8ம் தேதி வரை  கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், யாரிடமும் டெபாசிட் பெறக்கூடாது என ஆரூத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். டெபாசிட் தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உதவியாக  மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்தும் உத்தரவிட்டு, பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

டெப்பாசிட் தொகையை திரும்பப் பெறும் முறை

இந்நிலையில் முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் வைப்புத் தொகை செலுத்தியவர்கள், தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் டெப்பாசிட்களை திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 முதல் மாலை 5:45 மணி வரை  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட வாரியாக முகாம்கள்

இந்நிலையில், முன்னதாக ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் வைப்புத் தொகை வைத்த டெப்பாசிட்தாரர்கள் தங்கள் தொகைகளை திரும்பப்பெற முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாநிலங்கள் வாரியாக வேறு வேறு தேதிக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் மனுக்கள் செப்டெம்பர் 14ஆம் தேதிக்குப் பின் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

திடீர் திருப்பம்! இன்று தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்கள் மாவட்டம் இருக்கா?
திடீர் திருப்பம்! இன்று தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்கள் மாவட்டம் இருக்கா?
வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget