மேலும் அறிய

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒழுக்கமாக முடிவெட்டாமல் ரவுடி தோரணையிலும், சீருடை அணியாமலும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதைக்கண்ட விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

நல்ஒழுக்கம் பற்றி சுட்டிகாட்டிய ஆசிரியரை சினிமா பாணியில் நண்பர்களை அழைத்து வந்து மிரட்டிய சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து ஆசிரியகளும் தோகைமலை காவல்நிலையத்தில் மாணவர் மற்றும் அவருடன் வந்த 4 இளைஞர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியரை மிரட்டிய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சக ஆசிரியர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி அந்த பள்ளி மாணவருக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கவுன்சிலிங் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஒரு முறை திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனால், மாணவர் மீது புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், மாணவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உடன் வந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

மாணவரின் ஒழுங்கற்ற செயலைக் கண்டித்த சக ஆசிரியர்கள் பாதுகாப்பு கோரி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மாணவர் செயல்பாடு குறித்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

மாதா பிதா குரு தெய்வம் என்ற நிலையில் மூன்றாவது நிலையில் இருப்பவர்கள் குரு . குரு என்றால் ஆசிரியர் பெருமக்கள் என்று கூறிவரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை மிரட்டும் சம்பவம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்றைய சமுதாயத்தை வழி நலத்தை அனைத்து பள்ளிகளிலும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனவும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதுபோல் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டி வருகிறார்களா என கண்காணிக்க தனி குழுவை அமைத்து விட வேண்டும் என மாவட்ட சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget