மேலும் அறிய

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒழுக்கமாக முடிவெட்டாமல் ரவுடி தோரணையிலும், சீருடை அணியாமலும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதைக்கண்ட விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

நல்ஒழுக்கம் பற்றி சுட்டிகாட்டிய ஆசிரியரை சினிமா பாணியில் நண்பர்களை அழைத்து வந்து மிரட்டிய சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து ஆசிரியகளும் தோகைமலை காவல்நிலையத்தில் மாணவர் மற்றும் அவருடன் வந்த 4 இளைஞர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியரை மிரட்டிய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சக ஆசிரியர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி அந்த பள்ளி மாணவருக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கவுன்சிலிங் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஒரு முறை திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனால், மாணவர் மீது புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், மாணவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உடன் வந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

மாணவரின் ஒழுங்கற்ற செயலைக் கண்டித்த சக ஆசிரியர்கள் பாதுகாப்பு கோரி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மாணவர் செயல்பாடு குறித்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவெட்டச் சொன்ன ஆசிரியர்.. கும்பலைக் கூட்டிச் சென்று மிரட்டிய மாணவர்.. கரூரில் பரபரப்பு!

மாதா பிதா குரு தெய்வம் என்ற நிலையில் மூன்றாவது நிலையில் இருப்பவர்கள் குரு . குரு என்றால் ஆசிரியர் பெருமக்கள் என்று கூறிவரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை மிரட்டும் சம்பவம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்றைய சமுதாயத்தை வழி நலத்தை அனைத்து பள்ளிகளிலும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனவும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதுபோல் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டி வருகிறார்களா என கண்காணிக்க தனி குழுவை அமைத்து விட வேண்டும் என மாவட்ட சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget