மேலும் அறிய

Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?

Dindigul Hospital: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Dindigul Hospital: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து:

திண்டுக்கல் நேருஜி நகர் திருச்சி சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே, சிட்டி மருத்துவமனை எனப்படும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. தரைதளத்திற்கு மேலே 4 மாடிகளை கொண்டு இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன்படி, தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. மூன்றாவது தளத்தில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட, கடைசி தளத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன.  இந்தநிலையில் தான் நேற்று இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வரவேற்பு அறையில் திடீரென பலத்த சத்தம் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கு தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

தப்பிக்க முயன்ற நோயாளிகள்:

மளமளவென தீ சிறிதுநேரத்தில் தரைதளம் முழுவதும் பரவியது. இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் தரை தளத்தில் பற்றிய தீ மேல் தளங்களுக்கு வேகமாக பரவியது. ஒவ்வொரு தளமாக பரவிய தீ 4 தளங்களுக்கும் பரவ, எல்லா தளங்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மருத்துவமனையின் 4 தளங்களுக்கும் கரும் புகைமூட்டம் பரவியது. இதையடுத்து அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பதறி துடித்தனர். தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நோக்கில் அங்கும் இங்கும் ஓடினர். அவர்கள் உள்ளே இருந்து எழுப்பிய கூக்குரல்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியே நின்றபடி கதறி அழுத நிகழ்வுகள் காண்போரை மனமுடைய செய்தது.

6 பேர் உடல் கருகி பலி

தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொள்ள, இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்தன. உயிர் தப்பிக்க நோயாளிகள் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆபத்தறியாமல் லிஃப்ட் வழியாக கீழே இறங்க முயன்றனர். ஆனால் அவர்கள் லிஃப்ட்டுக்குள் சிக்கி கொண்டனர். லிஃப்டை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் அவர்களை மீட்டனர்.

இதனிடையே, திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக வந்த அவரது தாய் மாரியம்மாள், மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோர்திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன?

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் பூங்கொடி, மாவட்ட எஸ்.பி., பிரதீப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். கணினியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Embed widget