TN government employees retired : ஒரே நாளில் அரசு ஊழியர்கள் 5,000 பேர் பணி ஓய்வு.! காலியான 5 லட்சம் பணியிடம்-என்ன செய்யப்போகிறது தவெக அரசு.?
Tamil Nadu government employees retired : மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக தமிழக அரசு வட்டார தகவலாக உள்ளது.

அரசும் அரசு ஊழியர்களும்
எந்த ஒரு ஆட்சியும் அறிவிக்கும் மக்கள் நல திட்டங்கள், உதவி திட்டங்கள் என எந்த திட்டமாக இருந்தாலும் கடை நிலை மக்களை சென்றடைவது முக்கியம். எனவே இதற்கு அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவது அரசு ஊழியர்கள் தான். அந்த வகையில் என்ன தான் அரசு புதிய புதிய நலத்திட்டங்கள் தொடங்கினாலும் அந்த திட்டங்கள் மக்களை சென்றடையவில்லையென்றால் பாதிப்பு ஆட்சி புரியும் அரசுக்கு தான்.
எனவே அரசு ஊழியர்களின் செயல்பாட்டை பொறுத்தே ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். அந்த வகையில், ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமான காலிப்பணியிடம் உள்ளது. தற்போது மேலும் புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் பணி ஓய்வு பெற்றுள்ளன்னர்.
ஒரே நாளில் 5ஆயிரம் பேர் ஓய்வு
இந்த நிலையில் காலிப்பணியிடம் அதிகமாக உள்ளதால் மக்களுக்கான சேவைகள் உடனடியாக கிடைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உடனடியாக காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பல்வேறு அரசு தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.
5 லட்சம் காலிபணியிடம்
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது. திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது.
காலிப்பணியிடங்களை நிரப்பிடுக
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















