சென்னையில் இரு நாளில் மட்டும் 1,116 நபர்களுக்கு கொரோனா
சென்னையில் கடந்த இரு நாளில் மட்டும் 1,116 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு பணிகளை மாநில சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் குறித்த விழிப்புணர்வும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 4 ஆயிரத்து 082 ஆக இருந்தது. இந்த நிலையில், திங்கட்கிழமையான இன்று காலை நிலவரப்படி, சென்னையில் மட்டும் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,198 ஆக உயர்ந்துள்ளது.

தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,194 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















