மேலும் அறிய

PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டினை வழங்காமல் ஒட்டுமொத்த மக்களையும் வஞ்சிக்கின்ற திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற நாள் வந்துவிட்டது என்றும் பேசினார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இடஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து பாமக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் பாமகவை சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ள திமுகவிற்கு வன்னியர் என்றாலே பிடிக்காது. இந்த ஆட்சியில் இருக்கின்ற நான்கு அமைச்சர்கள் டம்மி பீஸ்ஸாகவும்,டம்மியாக வைத்துள்ளனர். மூத்த அமைச்சர் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கரன், ராஜேந்திரன் ஆகிய நான்கு துறைகளிலும் நிதி ஒதுக்கவில்லை இதுதான் வன்னியர்களுக்கு இந்த ஆட்சியில் இருக்கின்ற மரியாதை என்றும் கூறினார். முக்கியமான முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரண்டும் அவர்களுக்கு வைத்துள்ளனர். எனவே வன்னியர்களுக்கு திமுகவில் அமைச்சர் பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், வன்னியர் பிள்ளைகளை படிக்க விடுங்கள் என்றார். சேலம் மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்த வசதிகளும் ஏற்படுத்த முடியவில்லை என்று திமுக கவுன்சிலர்கள் புலம்புகிறார்கள். 2026 இல் மக்கள் அகற்றுவதற்கு முன்பாக சட்டமன்ற கூட்டத்தை இந்த ஆண்டாவது கூட்டுங்கள். அவ்வாறு கூட்டாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் விமர்சனம் செய்தார். ஒட்டுமொத்த மக்களையும் வஞ்சிக்கின்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற நாள் வந்துவிட்டது. அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று சொல்வார்கள். இனி ஒருமுறை ஏமாற்றத்தை தாங்கமுடியாது. பாமக தலைவர் அன்புமணி ராமதாசை வெற்றி பெற செய்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும். அன்புமணி ராமதாஸ் போன்று அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை. தமிழகத்தை பாமக நினைத்தால் ஸ்தம்பிக்க வைக்க முடியும். ராமதாசை கொச்சைப்படுத்தி பேசுகிறது சரியா என்று கேள்வி எழுப்பினார். தவறை திமுக உணரும் காலம் வெகு விரைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.

PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அருள், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை எந்தவித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் கூறி ஆயிரம் நாள் ஆன நிலையில் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டரை கோடி வன்னியர்கள் இந்த 10.5% உள் இட ஒதுக்கீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக திமுக அரசு வன்னியர்களுக்கான 10.5% உள்ள இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று கூறினார். மேலும், தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என எச்சரித்தார்.

தலைப்பு செய்திகள்

நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget