மேலும் அறிய

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்தது. பின்னர் சாரல் மழையாக துவங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

குறிப்பாக சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இது மட்டுமில்லாமல் சாலையில் இரண்டு புறமும் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் மழை நீரும் சாக்கடை நீரும் புகுந்துள்ளது இதனால் வியாபாரிகள் மிகுந்த வேதனையடைந்தனர். மேலும் கிச்சிபாளையம் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல்துறையினரே களத்தில் இறங்கினர். போக்குவரத்தை சரிசெய்து கொண்டு, சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை எடுத்து விடும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாநகராட்சி மேற்பார்வையாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக கேட்டபோது பணியாளர்கள் வருவார்கள் என்று அலட்சியமாக பதில் அளித்தார். காலை முதலே வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி தாமதமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுவையில், எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தீபாவளி நேரம் என்பதால் முக்கியமான வணிக கடைகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் சென்றால் வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனம் பழுதடைந்து விடுவதாகவும் அதற்கு 20 ஆயிரத்திற்கு மேலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு விடுவதாக வேதனை தெரிவித்தனர். சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் வராததால் வயதானவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மூதாட்டி ஒருவர் கூறினார் நேற்றைய தினம் சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது கீழே விழுந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Maanadu : Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதிRahul Gandhi speech On wayanad :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Embed widget