மேலும் அறிய

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்தது. பின்னர் சாரல் மழையாக துவங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

குறிப்பாக சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இது மட்டுமில்லாமல் சாலையில் இரண்டு புறமும் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் மழை நீரும் சாக்கடை நீரும் புகுந்துள்ளது இதனால் வியாபாரிகள் மிகுந்த வேதனையடைந்தனர். மேலும் கிச்சிபாளையம் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல்துறையினரே களத்தில் இறங்கினர். போக்குவரத்தை சரிசெய்து கொண்டு, சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை எடுத்து விடும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாநகராட்சி மேற்பார்வையாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக கேட்டபோது பணியாளர்கள் வருவார்கள் என்று அலட்சியமாக பதில் அளித்தார். காலை முதலே வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி தாமதமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுவையில், எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தீபாவளி நேரம் என்பதால் முக்கியமான வணிக கடைகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் சென்றால் வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனம் பழுதடைந்து விடுவதாகவும் அதற்கு 20 ஆயிரத்திற்கு மேலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு விடுவதாக வேதனை தெரிவித்தனர். சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் வராததால் வயதானவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மூதாட்டி ஒருவர் கூறினார் நேற்றைய தினம் சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது கீழே விழுந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget