மேலும் அறிய

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்தது. பின்னர் சாரல் மழையாக துவங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

குறிப்பாக சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இது மட்டுமில்லாமல் சாலையில் இரண்டு புறமும் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் மழை நீரும் சாக்கடை நீரும் புகுந்துள்ளது இதனால் வியாபாரிகள் மிகுந்த வேதனையடைந்தனர். மேலும் கிச்சிபாளையம் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல்துறையினரே களத்தில் இறங்கினர். போக்குவரத்தை சரிசெய்து கொண்டு, சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை எடுத்து விடும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாநகராட்சி மேற்பார்வையாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக கேட்டபோது பணியாளர்கள் வருவார்கள் என்று அலட்சியமாக பதில் அளித்தார். காலை முதலே வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி தாமதமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Police Cleaning Drain: கனமழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்... சாக்கடையின் அடைப்பை எடுத்த போலீஸ்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுவையில், எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தீபாவளி நேரம் என்பதால் முக்கியமான வணிக கடைகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் சென்றால் வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனம் பழுதடைந்து விடுவதாகவும் அதற்கு 20 ஆயிரத்திற்கு மேலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு விடுவதாக வேதனை தெரிவித்தனர். சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் வராததால் வயதானவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மூதாட்டி ஒருவர் கூறினார் நேற்றைய தினம் சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது கீழே விழுந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Embed widget