மேலும் அறிய

தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மாரண்டஹள்ளி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கெண்டையணள்ளி ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரமுட்லு கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமமாக இருந்தது. தற்பொழுது வளர்ச்சி அடைந்து குடும்பங்கள் அதிகரித்துள்ளது. ஆனாலும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள், மூன்று குடும்பங்கள் என வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த சாஸ்திரமுட்லு கிராமத்தில் உள்ள 50 பேருக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
 

தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

இந்நிலையில் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் தனியாக வீடு கட்டுவதற்கும், அரசின் இலவச வீடு வாங்கி கட்டவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் தெரியாததால், மேற்கொண்டு வீடுகள் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், இலவச வீட்டு மனை பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு முறையிட்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
 

தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும். மேலும் வறுமையில் உள்ள தங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கி, வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர். மேலும் இந்த இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தராததால், தங்களால் சுயமாகவும் வீடு கட்டிக் கொள்ள முடியவில்லை. அதேபோல் அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற அந்த இலவச வீடு பெற்று கட்ட முடியாத சூழல் இருந்து வருகிறது. எனவே தருமபுரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாஸ்திரமுட்லு கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Embed widget