மேலும் அறிய

நடனமாடியும் பாடல்கள் பாடியும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்...!

’’கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குகை பகுதியில் 110 நரிக்குறவர் இன குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கோரிக்கை’’

கடந்த 40 ஆண்டுகளாக குகைப் பகுதியில் குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு  இலவச பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். பூங்கொடி கிராம நரிக்குறவ இன மக்களுக்கு பட்டா, நலத் திட்ட உதவிகள் மற்றும் சாதி சான்றிதழ் வழங்கிய தமிழக முதல்வருக்கு நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

நடனமாடியும் பாடல்கள் பாடியும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்...!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நரிக்குறவர்கள் நல வாரியத்தை ஏற்படுத்தி, அதில் பல ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். அப்போது, முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் கருணாநிதி நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்தார். அதற்கும், இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் சென்னை பூங்கொடி கிராமத்தில் குடியிருந்து வரும் நரிக்குறவ இன மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் சென்று மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் இலவச பட்டா மற்றும் சாதி சான்றிதழ் வழங்கினார். இதற்காக நரிக்குறவர் இன மக்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நன்றியை நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் தெரிவித்துக் கொண்டனர்.

நடனமாடியும் பாடல்கள் பாடியும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்...!

இந்த நிலையில் சேலம் குகை பகுதியில் கடந்த 40 ஆண்டு காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அரசு பட்டா வழங்கவில்லை உடனடியாக தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என  30 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர். 

இதுகுறித்து நரிக்குறவர் இன நலவாரிய உறுப்பினர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நரிக்குறவர் இன மக்களை பாதுகாக்க எங்களுடைய வாழ்க்கைத்தரம் மேம்பட மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி நரிக்குறவர் இன நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். சேலம் மாவட்டத்தில் சுமார் 206 பேர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்  தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் சென்னை பூங்கொடி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நேரில் சென்று பட்டா மற்றும் சாதி சான்றிதழ் வழங்கினார். அதற்காக, நரிக்குறவர் இன மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குகை பகுதியில் 110 நரிக்குறவர் இன குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம் இதுபோல் எங்களுக்கும் பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதாக கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.