மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 329 கன அடியாக சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 491 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 491 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 329 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 329 கன அடியாக சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 109.88 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 78.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 329 கன அடியாக சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை  - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை  - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
Governor RN Ravi: நடுராத்திரியில் கதவை தட்டிய போலீஸ்; அலறிய துணை வேந்தர்கள்- ஆளுநர் போட்ட குண்டு!
Governor RN Ravi: நடுராத்திரியில் கதவை தட்டிய போலீஸ்; அலறிய துணை வேந்தர்கள்- ஆளுநர் போட்ட குண்டு!
11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
India Vs US: நண்பன் நண்பன்தான்யா.. வரியை தவிர்க்க அமெரிக்காவுடன் முதல் ஆளாக இந்தியா ஒப்பந்தம்...
நண்பன் நண்பன்தான்யா.. வரியை தவிர்க்க அமெரிக்காவுடன் முதல் ஆளாக இந்தியா ஒப்பந்தம்...
Embed widget