மேலும் அறிய

அரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்படவில்லை என புகார்...!

’’தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவம் பார்த்துக் கொண்டவர்களுக்கு முழுமையாக அரசு உதவிகள் சென்றடையவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்’’

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் கர்ப்பமுற்று 12 வாரத்துக்குள் கிராம மற்றும் நகர செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து ‘பிக்மி’ எண் பெற்றவுடன் 2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தொடர்ந்து பதிவு செய்து நான்காவது மாதத்துக்குப் பிறகு இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக 4 ஆயிரம், பேறு காலம் முடிந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக 4 ஆயிரம், குழந்தைக்கு 9 மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக 2 ஆயிரம் என மொத்தம் 14 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
 
அரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்படவில்லை என புகார்...!
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அரூர் அடுத்த கீழானூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிகளும் தீர்த்தமலை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கின்றனர். ஆனால் தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவம் பார்த்துக் கொண்டவர்களுக்கு முழுமையாக அரசு உதவிகள் சென்றடையவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
 
அரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்படவில்லை என புகார்...!
 
ஒருசிலருக்கு குழந்தை பிறந்து, 2 ஆண்டுகள் ஆகியும் நிதியுதவி வரவில்லை. இது குறித்து கீழானூர் கிராம செவிலியர் அருள்மொழியிடம் கர்ப்பிணிகள் கேட்டால், உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டேன், நீங்கள் வங்கியில் கேளுங்கள் என கூறி, டேப்-ஐ காட்டி அனுப்பியுள்ளார். ஆனால் கீழானூர் கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கு மகப்பேறு நிதி முதல் தவணை, இரண்டு தவணை வரை மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் ஒருவருக்கும் முழுமையான நிதி கிடைக்கவில்லை. தமிழக அரசு ஏழை பெண்கள் கர்ப்ப காலத்தில், சத்தான உணவை உட்கொண்டு, ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என நிதியை வழங்குகிறது.
 
அரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்படவில்லை என புகார்...!
 
ஆனால் தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் முழுமையான நிதி வழங்கப்படுவதில்லை. கர்ப்பிணிகளிடம் ரூ.18,000 நிதிக்கு, பணம் கொடுத்தால் மட்டுமே, செவிலியர்கள் விவரங்களை பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் பணம் கொடுத்தும், எங்களுக்கு நிதி கிடைக்கவில்லை, செவிலியர்கள் முறைகேடு செய்கிறார்கள் என கர்ப்பிணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மகப்பேறு நிதி உதவி கிடைக்காத கர்ப்பிணிகளுக்கு உடனடியாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
Embed widget