மேலும் அறிய

எலி மருந்து சாப்பிட்டு அரசுப் பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - சேலத்தில் பரபரப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. மாணவிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து விசாரணை.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த 4 மாணவிகள் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். கடந்த நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்கள் வீட்டிற்கு நான்கு மாணவிகளும் சென்றுள்ளனர். பின்னர் விடுமுறை முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு வராத நிலையில் இது தொடர்பாக ஆசிரியர்கள் மாணவிகளின் இல்லத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். மாணவிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

எலி மருந்து சாப்பிட்டு அரசுப் பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - சேலத்தில் பரபரப்பு

பின்னர் பள்ளி விடுதியில் சென்று பார்த்த போது பள்ளி விடுமுறையில் நால்வரும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று விட்டு விடுதிக்கு நேரடியாக வந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிந்துவிட்ட பயத்தில் நான்கு மாணவிகளும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். உடனே நான்கு மாணவிகளையும் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும் தொடர்ந்து நான்கு மாணவிகளுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எலி மருந்து சாப்பிட்டு அரசுப் பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - சேலத்தில் பரபரப்பு

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”பத்தாம் வகுப்பு மாணவி நால்வரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திட்டி விடுவார்கள் என்ற பயத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். நான்கு மாணவிகளும் அபாய கட்டத்தை தாண்டி பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ந்து  மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்று வருவதை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை அழைத்து பேசி உள்ளதாகவும், விரைவில் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போதும் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget