மேலும் அறிய

தருமபுரியில் 34 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை இளநிலை வன உதவியாளர் கைது

’’நான்கு மணி நேர விசாரணைக்கு   பிறகு அவரை, இலஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்’’

தருமபுரி மாவட்டம்,  எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்த  சின்னசாமி என்பவர் வனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். தொடர்ந்து சின்னசாமி கடந்த 2007 ஆண்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்ப ஓய்வூதியம் அவரது மனைவி சென்னாம்மாள் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு சென்னம்மாவும் இறந்து விட்டார். தொடர்ந்து இந்த ஓய்வூதியத்தை மகள் சாந்திக்கு கணவர் இல்லாததால், தாய் வாங்கி வந்த குடும் ஓய்வூதியத்தை மகள் சாந்தி பெயருக்கு மாற்ற  அவரது உறவினர் முருகன் என்பவர்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். மேலும்  3 ஆண்டுகள்  ஓய்வு ஊதிய நிலுவை தொகை பெறவும் விண்ணப்பித்துள்ளார். 
 

தருமபுரியில் 34 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை இளநிலை வன உதவியாளர் கைது
 
அப்போது அங்கு இளநிலை உதவியாளராக பணியாற்றும் பழனிசாமி என்பவர் ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாந்தியின் உறவினர்  முருகன், தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையினரிகம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனைப்படி முருகன் வன அலுவலகத்திற்கு சென்று இளநிலை உதவியாளர் பழனிசாமியிடம் லஞ்சப்பணம் கொடு‌த்து‌ள்ளா‌ர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் லஞ்சம் வாங்கும் போது பழனிசாமியை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்த 34,410 ரூபாயை பறிமுதல் செய்து  நான்கு மணி நேர விசாரணைக்கு   பிறகு அவரை, இலஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து வன கோட்ட அலுவலகத்தில், அதிகாரி இலஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் 
 
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த  புது கொக்கராப்பட்டி பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று ஆங்காங்கே சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை வசதியை ஏற்படுத்தி, சாக்கடை கால்வாய் அமைத்திருந்தால், இதுபோன்று நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்திய பின்பு இரண்டு ஆண்டுகள் மட்டுமே குடிநீர் தங்கள் பகுதிக்கு வந்த நிலையில் தற்போது வரை தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் மண் சுவற்றில் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில் மழை காலம் என்பதால் மண் சுவற்றில் தண்ணீர் ஊரி ஒரு பகுதி இடிந்து விழுகின்றன. எனவே இக் கிராமத்தில் சாலை, குடிநீர், வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி, குடியிருப்புகளின் முன்பு சேறும் சகதியுமான இடத்தில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Embed widget