மேலும் அறிய

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1893 ஆம் ஆண்டில் தொடங்கிய பள்ளி 123 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 123 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியும், கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில வழிக் கல்வியும் இருந்து வருகிறது. தற்பொழுது, இப்பள்ளியில் 402 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த 137 மாணவ, மாணவியரின் பெற்றோர் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் காரணமானது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

அப்போது தலைமையாசிரியர் அரசிடம் கோரிக்கை வைத்து ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியுள்ளர். அதன்பின் தமிழ் வழியில் பயின்று வந்த அனைத்து மாணவர்களும் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் வழிக் கல்வியில் சேர்வதற்கு யாரும் முன்வராத நிலையில் தற்போது முதலாம் வகுப்பில் இளவேனில் என்ற மாணவி சேர்ந்துள்ளார். இந்த பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இளவேனில் தாய் சுபா ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இதுகுறித்து இளவேனில் தாய் சுபா கூறுகையில், "தங்களது குழந்தையை அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று என் கணவரும் நானும் விரும்பினோம். இதற்கு குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வி இல்லை என்று ஏத்தாப்பூர் பகுதி மக்கள் கூறினார். தலைமையாசிரியர் ஜெயக்குமார் இடம் கேட்டபோது தமிழ்வழிக் கல்வி உள்ளது. ஆனால் எட்டு ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஏத்தாப்பூரில் உள்ளதால் தமிழ் வழியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்று கூறியதாக சுபா கூறினார். தங்களது குழந்தை சுயசிந்தனை, கற்பனைத்திறன் அனைவரிடமும் சகஜமாகப் பழக வேண்டும் என்பதால் அரசு பள்ளியில் சேர்த்ததாக கூறினார். அதுமட்டுமின்றி அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என கூறினார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், ”தனியார் பள்ளி மோகம் காரணமாக குழந்தைகளை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தமிழ்வழிக் கல்வியை முழுமையாக மறந்து விட்டனர் என்றும், தங்களது பள்ளியில் தமிழ்வழிக் கல்வி இருந்தபோது 2012 - 2013 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்றிருந்தும், பெற்றோர்களின் அறியாமை காரணமாக எட்டு ஆண்டுகளாக தமிழ் வழியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று கூறினார். இதுமட்டுமின்றி ஏத்தாப்பூர் அரசு பள்ளி 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளதாக கூறினார். ஆண்டுதோறும் மாணவரின் சேர்க்கையின் போது ஏத்தாப்பூர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பள்ளியின் பெருமைகள் குறித்து கூறியும், தற்பொழுது ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தங்களது குழந்தையை எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக” அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
பொங்கலுக்குப் பிறகுதான் தெரியும் யார் எந்தப் பக்கம்! - திமுக கூட்டணி கலகலத்துவிட்டது: நயினார் நாகேந்திரன் அதிரடி
பொங்கலுக்குப் பிறகுதான் தெரியும் யார் எந்தப் பக்கம்! - திமுக கூட்டணி கலகலத்துவிட்டது: நயினார் நாகேந்திரன் அதிரடி
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Embed widget