மேலும் அறிய

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1893 ஆம் ஆண்டில் தொடங்கிய பள்ளி 123 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 123 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியும், கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில வழிக் கல்வியும் இருந்து வருகிறது. தற்பொழுது, இப்பள்ளியில் 402 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த 137 மாணவ, மாணவியரின் பெற்றோர் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் காரணமானது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

அப்போது தலைமையாசிரியர் அரசிடம் கோரிக்கை வைத்து ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியுள்ளர். அதன்பின் தமிழ் வழியில் பயின்று வந்த அனைத்து மாணவர்களும் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் வழிக் கல்வியில் சேர்வதற்கு யாரும் முன்வராத நிலையில் தற்போது முதலாம் வகுப்பில் இளவேனில் என்ற மாணவி சேர்ந்துள்ளார். இந்த பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இளவேனில் தாய் சுபா ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இதுகுறித்து இளவேனில் தாய் சுபா கூறுகையில், "தங்களது குழந்தையை அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று என் கணவரும் நானும் விரும்பினோம். இதற்கு குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வி இல்லை என்று ஏத்தாப்பூர் பகுதி மக்கள் கூறினார். தலைமையாசிரியர் ஜெயக்குமார் இடம் கேட்டபோது தமிழ்வழிக் கல்வி உள்ளது. ஆனால் எட்டு ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஏத்தாப்பூரில் உள்ளதால் தமிழ் வழியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்று கூறியதாக சுபா கூறினார். தங்களது குழந்தை சுயசிந்தனை, கற்பனைத்திறன் அனைவரிடமும் சகஜமாகப் பழக வேண்டும் என்பதால் அரசு பள்ளியில் சேர்த்ததாக கூறினார். அதுமட்டுமின்றி அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என கூறினார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், ”தனியார் பள்ளி மோகம் காரணமாக குழந்தைகளை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தமிழ்வழிக் கல்வியை முழுமையாக மறந்து விட்டனர் என்றும், தங்களது பள்ளியில் தமிழ்வழிக் கல்வி இருந்தபோது 2012 - 2013 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்றிருந்தும், பெற்றோர்களின் அறியாமை காரணமாக எட்டு ஆண்டுகளாக தமிழ் வழியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று கூறினார். இதுமட்டுமின்றி ஏத்தாப்பூர் அரசு பள்ளி 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளதாக கூறினார். ஆண்டுதோறும் மாணவரின் சேர்க்கையின் போது ஏத்தாப்பூர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பள்ளியின் பெருமைகள் குறித்து கூறியும், தற்பொழுது ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தங்களது குழந்தையை எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக” அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget