மேலும் அறிய

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1893 ஆம் ஆண்டில் தொடங்கிய பள்ளி 123 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 123 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியும், கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில வழிக் கல்வியும் இருந்து வருகிறது. தற்பொழுது, இப்பள்ளியில் 402 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த 137 மாணவ, மாணவியரின் பெற்றோர் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் காரணமானது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

அப்போது தலைமையாசிரியர் அரசிடம் கோரிக்கை வைத்து ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியுள்ளர். அதன்பின் தமிழ் வழியில் பயின்று வந்த அனைத்து மாணவர்களும் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் வழிக் கல்வியில் சேர்வதற்கு யாரும் முன்வராத நிலையில் தற்போது முதலாம் வகுப்பில் இளவேனில் என்ற மாணவி சேர்ந்துள்ளார். இந்த பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இளவேனில் தாய் சுபா ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இதுகுறித்து இளவேனில் தாய் சுபா கூறுகையில், "தங்களது குழந்தையை அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று என் கணவரும் நானும் விரும்பினோம். இதற்கு குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வி இல்லை என்று ஏத்தாப்பூர் பகுதி மக்கள் கூறினார். தலைமையாசிரியர் ஜெயக்குமார் இடம் கேட்டபோது தமிழ்வழிக் கல்வி உள்ளது. ஆனால் எட்டு ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஏத்தாப்பூரில் உள்ளதால் தமிழ் வழியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்று கூறியதாக சுபா கூறினார். தங்களது குழந்தை சுயசிந்தனை, கற்பனைத்திறன் அனைவரிடமும் சகஜமாகப் பழக வேண்டும் என்பதால் அரசு பள்ளியில் சேர்த்ததாக கூறினார். அதுமட்டுமின்றி அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என கூறினார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், ”தனியார் பள்ளி மோகம் காரணமாக குழந்தைகளை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தமிழ்வழிக் கல்வியை முழுமையாக மறந்து விட்டனர் என்றும், தங்களது பள்ளியில் தமிழ்வழிக் கல்வி இருந்தபோது 2012 - 2013 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்றிருந்தும், பெற்றோர்களின் அறியாமை காரணமாக எட்டு ஆண்டுகளாக தமிழ் வழியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று கூறினார். இதுமட்டுமின்றி ஏத்தாப்பூர் அரசு பள்ளி 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளதாக கூறினார். ஆண்டுதோறும் மாணவரின் சேர்க்கையின் போது ஏத்தாப்பூர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பள்ளியின் பெருமைகள் குறித்து கூறியும், தற்பொழுது ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தங்களது குழந்தையை எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக” அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
Embed widget