மேலும் அறிய

மரத்தில் வாட்டர் கேன்களை கட்டிவைத்து, பறவைகளை இளைப்பாற்றும் அன்புச் சிறுவர்கள்.. ஒரு அன்புக்கதை..

தருமபுரி அருகே கோடைகாலத்தில் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, வாட்டர் கேன்களை மரத்தில் கட்டி உணவு மற்றும் தண்ணீர் வைத்து வரும் சிறுவர்கள்.

தருமபுரி : கோடைகாலத்தில் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, வாட்டர் கேன்களை மரத்தில் கட்டி உணவு மற்றும் தண்ணீர் வைத்து வரும் சிறுவர்கள் சமூகத்துக்கு உதாரணமாக திகழ்கிறார்கள்.
 
தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற இளைஞர் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த பீனிக்ஸ் அமைப்பின் மூலம் பூகானஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த குழுவை சேர்ந்த அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

மரத்தில் வாட்டர் கேன்களை கட்டிவைத்து, பறவைகளை இளைப்பாற்றும் அன்புச் சிறுவர்கள்.. ஒரு அன்புக்கதை..
 
இந்நிலையில் மரக்கன்றுகளுக்கு  கோடைகாலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்ததால், கிராமத்தில் உள்ள ஏரியில் பாழடைந்த கிணற்றினை பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரி சுத்தப்படுத்தினார். இதனை தொடர்ந்து ஏரியில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை அந்தக் கிணற்றிலிருந்து மோட்டார் வைத்து மரக் கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பீனிக்ஸ் குழுவினர் வைத்த மரக்கன்றுகள் தற்போது ஓரளவுக்கு மரங்களாக வளர்ந்து நிற்கிறது.
 

மரத்தில் வாட்டர் கேன்களை கட்டிவைத்து, பறவைகளை இளைப்பாற்றும் அன்புச் சிறுவர்கள்.. ஒரு அன்புக்கதை..
 
இந்த பூகானஹள்ளி ஏரியில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளில் மா, பலா, கொய்யா, நாவல் போன்ற பல வகை மரங்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகையான பறவைகள் காலை, மாலை வேளைகளில் இந்த மரங்களில் வந்து அமர்ந்து பழங்களை உண்டு மகிழ்கின்றன. இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த பீனிக்ஸ் அமைப்பினர், இங்கு வரும் பறவைகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணினர். அப்பொழுது பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைப்பதற்காக, அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற மக்காத பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த வாட்டர் பாட்டில்களை எடுத்து, அதனை இரண்டாக வெட்டி, துளையிட்டு கம்பியின் மூலம் மரத்தில் கட்டி வருகின்றனர்.
 

மரத்தில் வாட்டர் கேன்களை கட்டிவைத்து, பறவைகளை இளைப்பாற்றும் அன்புச் சிறுவர்கள்.. ஒரு அன்புக்கதை..
 
இதில் மேல் பகுதியையும் தானியங்கள் வைத்தும், கீழ் பகுதியில் தண்ணீரையும் ஊற்றி வருகின்றனர். இந்த பீனிக்ஸ் குழுவினர் பூகானஹள்ளி ஏரியில் உள்ள அனைத்து மரங்களிலும் வாட்டர் பாட்டில்களை கட்டிவைத்து தானியங்களையும், தண்ணீரை வைத்து வருகின்றனர். இதனால் இந்த பகுதிக்கு வருகின்ற பறவைகள் மரத்தில் அமரும் பொழுது, இங்கே கட்டி வைக்கப்பட்டுள்ள தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்து விட்டுச் செல்கின்றது. தொடர்ந்து தினமும் மரக்கன்றுகளை பராமரித்து வரும் ஃபீனிக்ஸ் குழுவினர், பறவைகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் குறைவாக இருந்தால், அதனை மீண்டும் நிரப்பி விட்டு செல்கின்றனர்.
 

மரத்தில் வாட்டர் கேன்களை கட்டிவைத்து, பறவைகளை இளைப்பாற்றும் அன்புச் சிறுவர்கள்.. ஒரு அன்புக்கதை..
 
கோடை காலத்தில் மனிதர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்  நிலை இருப்பதால், பறவைகள் உணவு மற்றும் தண்ணீருக்கு எங்கே செல்லும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பீனிக்ஸ் குழுவினர் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வைத்து வருகின்றனர். மேலும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், இயற்கையான காற்றை சுவாசிக்கவும், அதிக மழை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வரும் இந்த பீனிக்ஸ் குழுவினர், தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் பவகையில் தூக்கி எறியப்படுகின்ற பிளாஸ்டிக் வாட்டர் கேன்களின் மூலம் பறவைகளின் பசியையும்  தாகத்தையும் போக்கி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget