மேலும் அறிய

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 மாணவர்கள் பலியான சோகம்

தீவிர சிகிச்சையில் இருந்த ஜீவபாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
 
தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியைச் சேர்ந்த கவியரசு(21)டிப்ளாமோ படித்து வருவகிறார். கவியரசு தனது உறவினர் ஒருவர் நேற்று இரவு வீட்டிற்கு கார் எடுத்து வந்துள்ளார். அப்போது கார் எடுத்துக் கொண்டு அதனை ஓட்டி சுற்றி பார்க்க நினைத்த கவியரசு அங்கிருந்த சக நண்பர்களான பாடி கிராமத்தைச் சேர்ந்த ராகுல்(22),  பத்தாம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் (15), ஜீவபாரதி(21),  கார்த்திக்(22) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு, கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். 
 

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3  மாணவர்கள் பலியான சோகம்
 
 அப்பொழுது நண்பர்களை சவாரி அழைத்து சென்று கவியரசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது சவுலூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது, கட்டுப்பாட்டை இழந்து கார் சேலத்திலிருந்து பெங்களூர் நோக்கி முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ராகுல், சந்தோஷ் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் தீவிர சிகிச்சையில் இருந்த ஜீவபாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவியரசு, கார்த்திக் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி குமாரசாமிபேட்டையை பகுதி சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 

 
 
மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்தது.
 

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3  மாணவர்கள் பலியான சோகம்
 
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று குறைந்து வினாடிக்கு 9,500 கன அடியாக சரிந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில்  நீர்திறப்பு குறைக்கப்பட்டால், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget