மேலும் அறிய

மழையால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம் - தொழிற்சாலையில் வாங்க மறுப்பதால் விவசாயிகள் கவலை

’’கூலியாட்களுக்கு கொடுக்க கூட வருவாய் இல்லை, கிழங்கு அழுகும் நிலையுள்ளது. போதிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை’’

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால், முன்னாடியே மரவள்ளி அறுவடை செய்யும் விவசாயிகள்-ஒரே ஆலைக்கு கிழங்கு வருவதால், நிறுத்தி வைத்து அழுகுவதால், விவசாயிகள் கவலை.
 
தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப் பட்டி பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 5000 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் ஆகிய ரகங்களில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். மேலும், வறட்சி காலங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது, சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்கின்றனர்.  ஒரு ஏக்கருக்கு 10 முதல் 13 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், ஆத்துார், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிழங்கு மில்லுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு 60 சதவீதம் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
 

மழையால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம் - தொழிற்சாலையில் வாங்க மறுப்பதால் விவசாயிகள் கவலை
 
தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அரைவை ஆலை  பாப்பிரெட்டிப்பட்டியில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் பெரும்பாலும் சேலத்தில் உள்ள ஆலைக்கு அதிக அளவில் மரவள்ளி கிழங்கு விற்பனைக்கு செல்கிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ள வயல்களில், தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கிழங்குகள் அழுகி விடுமோ என்ற அச்சத்தில், விவசாயிகள் தற்போது மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆனால் அறுவடை செய்யும் மரவள்ளிக் கிழங்குகளை பாப்பிரெட்டிப்பட்டி தனியார் அரவை ஆலைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு ஒரு நாளைக்கு 600 முதல் 800 டன் வரை மட்டுமே அரைக்கும் தன்மை உடையதால், ஏற்கனவே முன்பதிவு செய்து அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் அரைக்கப்பட்டு வருகிறது. தற்போது கிழங்கு ஒரு டன் ரூ.6000 வரை விலை போகிறது.  ஆனால் விலை குறைந்து விடும் என்று விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து, எடுத்து வருவதால், ஆலை நிர்வாகம் அரைவை செய்ய முடியாமல் கிழங்கு வாங்குவதில்லை. இதனால் அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் லாரிகளில் ஆலை முன்பு காத்து நிற்கிறது. அறுவடை செய்ய பட்டு 24 மணி நேரத்தில் அரைத்தால் மட்டுமே கிழங்குக்கு பாயிண்ட் கிடைக்கும், அதிகளவு கிழங்கு வரத்தால் காத்து நிற்பதால் அழுகும் நிலைக்கு தள்ளபடுகிறது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 
 

மழையால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம் - தொழிற்சாலையில் வாங்க மறுப்பதால் விவசாயிகள் கவலை
 
மேலும் சில கிழங்குகள் மழையால், அழுகி வருவதால், ஆலையில் எடுக்காமல் திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் கிழங்குகளை அறுவடை செய்து, அரைவைக்கு எடுத்து வந்தால், ஆலையில் திருப்பி அனுப்பினால் என்ன செய்வதென்று அறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆனால் ஏற்கனவே மழையால் கிழங்கு பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்து வந்தாலும், ஆலையில் எடுக்காததால், கூலியாட்களுக்கு கொடுக்க கூட வருவாய் இல்லை, கிழங்கு அழுகும் நிலையுள்ளது. போதிய விலை இல்லை என மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் மொத்தமும் நிராகரிக்காமல், எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Embed widget