மேலும் அறிய

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!

கல்லூரி முடிந்த மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

தன்னால் சரியாக படிக்க முடியவில்லை. உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்துநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் இளம்பரிதி. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். மேலும் மருத்துவ படிப்பில் இளம்பருதி சரியாக படிக்க வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும் தற்பொழுது இரண்டாம் ஆண்டிலும் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் ஆண்டுக்கு செல்லக்கூடிய மாணவன் இரண்டாம் ஆண்டிலே படித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
 

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!
 
 
தொடர்ந்து தனது நண்பர்கள் அனைவரும் மூன்றாம் ஆண்டில் படித்து வருவதால், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல், தனிமையில் இருந்ததாகவும், நண்பர்களுடன் சரியாக பேசாமல் தனிமையில் அதிக நேரம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று அனைவரும் கல்லூரி சென்றுள்ளனர். ஆனால் இளம்பரிதி விடுதியில் இருந்துள்ளார். தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் இளம்பரிதி. 
 

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!
 
 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூாி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய மாணவன் சடலத்தை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தனது அப்பா, அம்மாவுக்கு,  என்னால் நல்லா படிக்க முடியவில்லை. என்ன நன்றாக படிக்க வைக்க முடியலயே என கவலைப்படாதீர்கள்.  மேலும் இரண்டு நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களும் உங்கள் பிள்ளைகள் மாதிரி தான் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். நீங்கள் உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் என்னுடைய ஆசை என எழுதியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனது பெற்றோரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களும் நன்றாக இருங்கள் என தெரிவித்து அனைவருக்கும் நன்றி, என்னை மன்னித்து விடுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து கடிதத்தை கைப்பற்றிய, நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த கடிதத்தை உள்ள கையெழுத்துக்கள் அவரது தானா என அறையில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget