மேலும் அறிய

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!

கல்லூரி முடிந்த மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

தன்னால் சரியாக படிக்க முடியவில்லை. உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்துநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் இளம்பரிதி. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். மேலும் மருத்துவ படிப்பில் இளம்பருதி சரியாக படிக்க வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும் தற்பொழுது இரண்டாம் ஆண்டிலும் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் ஆண்டுக்கு செல்லக்கூடிய மாணவன் இரண்டாம் ஆண்டிலே படித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
 

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!
 
 
தொடர்ந்து தனது நண்பர்கள் அனைவரும் மூன்றாம் ஆண்டில் படித்து வருவதால், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல், தனிமையில் இருந்ததாகவும், நண்பர்களுடன் சரியாக பேசாமல் தனிமையில் அதிக நேரம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று அனைவரும் கல்லூரி சென்றுள்ளனர். ஆனால் இளம்பரிதி விடுதியில் இருந்துள்ளார். தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் இளம்பரிதி. 
 

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் : சிக்கியது பெற்றோருக்கு எழுதிய கடிதம்!
 
 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூாி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய மாணவன் சடலத்தை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தனது அப்பா, அம்மாவுக்கு,  என்னால் நல்லா படிக்க முடியவில்லை. என்ன நன்றாக படிக்க வைக்க முடியலயே என கவலைப்படாதீர்கள்.  மேலும் இரண்டு நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களும் உங்கள் பிள்ளைகள் மாதிரி தான் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். நீங்கள் உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் என்னுடைய ஆசை என எழுதியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனது பெற்றோரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களும் நன்றாக இருங்கள் என தெரிவித்து அனைவருக்கும் நன்றி, என்னை மன்னித்து விடுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து கடிதத்தை கைப்பற்றிய, நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த கடிதத்தை உள்ள கையெழுத்துக்கள் அவரது தானா என அறையில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
Embed widget