மேலும் அறிய

காவிரி ஆற்றில் தொடர்ந்து ஒரு வார காலமாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை!

காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.35 இலட்சம் கனஅடியாக நீர்வரத்து சரிவு-தொடர்ந்து ஒரு வார காலமாக தொடரும் வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகளுக்கு எட்டாவது நாளாக தடை.

தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லை என பிலிகுண்ட்லுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில், தொடர் கனமழையால் நீர் வரத்து படிப்படியாக உயர்ந்தது. இதனால் வினாடிக்கு 1.85 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடக மாநில அணைகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் வினாடிக்கு 51,000 கன அடியாக காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி அளவிற்கு மழை நீரை வந்து கொண்டு இருந்தது.

காவிரி ஆற்றில் தொடர்ந்து ஒரு வார காலமாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை!
 
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1.85 இலட்சம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. ஆனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தற்பொழுது மழை குறைய தொடங்கியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1.85 இலட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து, வினாடிக்கு 1.35 இலட்சம் கன அடியாக சரிந்தது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், காவிரி ஆற்றில் ஒரு வார காலமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேன்க்கல்லில் அருவிகள் மற்றும் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற உபரி நீர் 31,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதாலும், நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

 
உலக உடல்காய தினத்தை முன்னிட்டு அரூர் அரசு மருத்துவமனையில் காவலர், மருத்துவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைப் பயிற்சி.
 
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் இன்று உலக உடல் காயம் தினம் - கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முனிட்டு தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் – உதவி செய் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், முதலுதவி அளிப்பவர்கள், தீயணைப்பு துறையினர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைப் பயிற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு மூலம் அரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
 

காவிரி ஆற்றில் தொடர்ந்து ஒரு வார காலமாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை!
 
இந்த பயிற்சியில் சாலை விபத்தில் அடிப்பட்டவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு மீட்பு முதலுதவி சிகிச்சையை அழிப்பது குறித்து விரிவான செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், எலும்பு முறிவு, ரத்தப்போக்கு, விஷக்கடி, மின்சாரம் தாக்குதல், நீரில் மூழ்குதல் போன்ற பல அவசர நிலைகளில் முதுலதவி சிகிச்சையை அழிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
Embed widget