மேலும் அறிய

Crime: சினிமா ஆசை காட்டி ஆபாசபடம் எடுத்த இயக்குனர்..! குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போலீஸ்..!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை ஆபாசபடம் எடுத்ததாக கைது செய்யப்பட்ட இயக்குனர் மற்றும் அவரது பெண் உதவியாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி வந்தார், சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தை பார்த்து சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றார்.

அந்த அலுவலகத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல் சத்ரியன் (38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெய ஜோதி (23) ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு ரூ. 30 ஆயிரம் பணம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனையடுத்து இரும்பாலையை சேர்ந்த பெண் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார். ஆனால் கம்பெனியில் மூன்று மாதம் வேலைபார்த்தும் அதற்கான சம்பளத்தை அவர்கள் வழங்கவில்லை, சம்பளத்தை கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் கம்பெனியின் ஒரு அறையில் பெண்களின் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அங்கு சில பெண்களை வைத்து படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்து வந்ததும் தெரியவந்ததை அடுத்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

Crime: சினிமா ஆசை காட்டி ஆபாசபடம் எடுத்த இயக்குனர்..! குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போலீஸ்..!

உடனே, இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று ஜெய ஜோதி மற்றும் வேல் சத்ரியன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆபாசமாக நோ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க இருப்பது தெரியவந்தது.

மேலும் சமூக வலைதளங்களில் வேல் சத்ரியன் பெண்களுடன் டிக் டாக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்காக இளம் பெண்களை தேர்வு செய்தது தெரிந்தது. பின்னர் இரும்பாலையை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த கம்பெனி அலுவலகத்தில் இருந்த லேப்டாப், செல்போன், கேமரா ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . அதில் சில பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதாக கோரி ஆபாசமாக படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்தில் சேலம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? வேல் சத்ரியனுக்கு உதவியாக வேறு யாராவது உள்ளனரா? என்பது குறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடர்பு சோதனை நடத்தி வருகின்றனர்.

Crime: சினிமா ஆசை காட்டி ஆபாசபடம் எடுத்த இயக்குனர்..! குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போலீஸ்..!

வேல் சத்ரியன் பெண்களிடம் ஆபாச திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட சிலர் முன்வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம், அவர்கள் குறித்த விவரங்கள் வெளியே வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இளம் பெண்களிடம் சினிமா ஆசை காட்டி ஆபாச புகைப்படம் எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வேல் சத்திரியன் ஜெயஜோதி ஆகியோர் பணம் பெற்றுக்கொண்டு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி, பல இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி, பொது ஒழுக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹாேதா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணை பிறப்பித்தார். இதற்கான ஆணையை வேல்சத்திரியின் சேலம் மத்திய சிறையிலும் மற்றும் ஜெயஜோதி கோயம்புத்தூர் பெண்கள் தனிக்கிளை சிறையிலும் சார்வு செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
Embed widget