மேலும் அறிய

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார்.

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி  5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ,பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிகளில் அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை அரூர் அடுத்த கீழானூர் வாணகயாற்றின் குறுக்கே ரூ.4.40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இதற்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாருக்கு தகவல் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளது.
 

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள்  போராட்டம்
 
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணித்து திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுகவின்  எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி இருவரும் தருமபுரி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், அரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழனூர் பகுதியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக காலத்தில் பாலம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று தருமபுரி திமுக பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான தனக்கு தகவல் தராமல் பூமி பூஜை நடைபெற்றுள்ளது . அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை புறக்கணித்து பூமி பூஜைகள் மற்றும் திறப்பு விழாக்கள் நடைபெறுகிறது . இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே  புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் தகவல் ஏதும் தராமல் பூமி பூஜை நடைபெற்று உள்ளது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் புறக்கணிக்கிறார்களா என்று சந்தேகமாக உள்ளது.
 

தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள்  போராட்டம்
 
 
வேலூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு பாலத்தை திறந்து வைத்தார் என்பதற்காக வேலூர் காவல் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல் தருமபுரி மாவட்ட திமுக மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து புறக்கணித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட திட்ட அலுவலர் பாபு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது எடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தால், பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget