மேலும் அறிய

ஹெக்டேருக்கு 20,000 போதாது; ஏக்கருக்கு 20,000 வேண்டும் - முன்னாள் அமைச்சர் காமராஜ் கோரிக்கை

’’இதுவரை பெய்த மழையில் பயிர்கள் எல்லாம் மூன்று முறை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’

திருவாரூரில் அதிமுக சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ பேசியதாவது, அதிமுக தொண்டர்களின் பலத்தோடு நீண்டு நிலைத்திருக்கக்கூடிய மாபெரும் இயக்கமாகும். அனைவரையும் வாழ வைக்கும் இயக்கம் என்பதால், அனைத்து தரப்பினரின் ஆதரவும் இந்த இயக்கத்திற்கு உண்டு. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் அனைத்தையும் அதிமுக கைப்பற்றி 100 சதவீத வெற்றியை பெற்றது. மீண்டும் நடைபெறக்கூடிய நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில்  அதே வெற்றியை அதிமுக பெறும். இந்த வெற்றிக்கு அதிமுக தொண்டர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 

ஹெக்டேருக்கு 20,000 போதாது; ஏக்கருக்கு 20,000 வேண்டும் - முன்னாள் அமைச்சர் காமராஜ் கோரிக்கை
 
ஜெயலலிதா ஆட்சியின்போது இந்த மாவட்டத்தில் கல்லூரிகள் அமைத்தல், பள்ளிகள் தரம் உயர்த்துதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் நடைபெற்றது. அதேபோல  எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான ஆட்சி நடைபெற்றது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. மக்கள் சங்கடத்திற்கு ஆளான அந்த நேரத்தில் அதிமுகவின் பணி ஈடுசெய்யமுடியாத பணியாகும்.  துயரங்களில் இருந்து மக்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். இது போல் கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவர்களை வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் முதல் வெற்றியை பெறுவோம். தொடர்ந்து மக்களிடத்தில் வாக்கு சேகரித்து அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். 

ஹெக்டேருக்கு 20,000 போதாது; ஏக்கருக்கு 20,000 வேண்டும் - முன்னாள் அமைச்சர் காமராஜ் கோரிக்கை
 
தற்போது தீபாவளி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெய்த மழையில் பயிர்கள் எல்லாம் மூன்று முறை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு  20,000 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் அதுபற்றி செவிசாய்க்காமல் முற்றிலும் பாதித்த பயிர்களுக்கு மட்டும் ஹெக்டேருக்கு ரூ 20 ஆயிரம் என்ற அளவில் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. நீரில் மூழ்கிய அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு 20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 
குறுவை அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டு தற்போதைய மழையால் முளைத்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வருகிறது. உடனடியாக கொள்முதல் செய்த இந்த நெல் மூட்டைகளை அறவைக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர் மழை மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகியுள்ளனர். அந்த சங்கடங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்தாக அதிமுகவினர் செயல்பட வேண்டும். அதன்மூலம் அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் டாக்டர் கோபால், சிவ.ராஜமாணிக்கம்,  மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அஷ்ரப், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget