மேலும் அறிய

மின் திட்டத்தை அதானியிடம் கொடுக்க ராஜபக்சேவை மோடி வற்புறுத்தினார்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

குறிப்பட்ட ஒரு நபருக்கோ நிறுவனத்திற்கோ திட்டத்தை அளிக்க அனுமதி வழங்கியதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் இலங்கை மின்துறை தலைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுவிடம் நேரடியாக அளிக்க இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வற்புறுத்தியதாக அவரே கூறினார்" என திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். 

இந்த திடுக்கிடும் தகவலை பகிர்ந்து இரண்டே நாள்களில், மின்துறை தலைவர் தான் சொன்ன கருத்தை திரும்ப பெற்றுள்ளார். உணர்ச்சி வசப்பட்டு பொய் சொல்லிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

பொதுத்துறைக்கான நாடாளுமன்ற கமிட்டியில் வாக்குமூலம் அளித்த சிலோன் மின்துறை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்ட், "500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்துவதாக இலங்கை அதிபர் என்னிடம் தெரிவித்தார். 

கடந்த 2021ஆண்டு, நவம்பர் 24ஆம் தேதி, நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அதிபர் என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் எனக் கூறினார்" என்றார். இலங்கையின் வட கடலோர பகுதியில் அமைந்துள்ள 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை கட்ட அதானி குழுமம் எப்படி தேர்வு செய்யப்பட்டது என நாடாளுமன்ற குழு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

விசாரணையின்போது இதுகுறித்து விரிவாக விளக்கிய பெர்டினாண்ட், "அதானி நிறுவனத்திற்கு திட்டத்தை அளிப்பது குறித்து முதலீட்டு குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதை அதிபரிடமே கூறினேன். இதுகுறித்து பரிசீலிக்குமாறு அவர் வற்புறுத்தினார்.

நிதிச் செயலாளர் தேவையானதைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினேன். இது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதை நான் சுட்டிக்காட்டினேன்" என்றார்.

"இந்த காற்றாலை மின்திட்டத்தை ஏலம் விடவில்லையா" என விசாரணையின்போது, நாடாளுமன்ற குழு தலைவர் சரிதா ஹேரத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பெர்டினாண்ட், "இது அரசுக்கும் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம். ஆனால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த விலைக் கொள்கையின்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்" என்றார்.

1989 மின்சார சட்டத்தில், போட்டி ஏலத்தை நீக்கி நாடாளுமன்றம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிய நிலையில், இந்த பொது விசாரணை நடைபெற்றது. அதானியிடம் திட்டத்தை ஒப்படைக்கவே, இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததாக பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா புகார் தெரிவித்துள்ளது.

குறிப்பட்ட ஒரு நபருக்கோ நிறுவனத்திற்கோ திட்டத்தை அளிக்க அனுமதி வழங்கியதாக வெளியான செய்திக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்திருந்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget